Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் பலனடையும் விதத்தில் செயற்படுபவராக ஆர்பர் மாறிவிட்டார் -அரச சமாதான செயலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் பலனடையும் விதத்தில் செயற்படுபவராக ஆர்பர் மாறிவிட்டார்

*அரச சமாதான செயலகம் கூறுகிறது

பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும் விதத்தில் செயற்படும் ஒருவராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ் தானிகர் லூயிஸ் ஆர்பர் மாறிவிட்டதாக அரச சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான லூயிஸ் ஆர்பரின் வருகை தொடர்பாக அரச சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் ஐ.நா.கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ்நெற் இணையத்தின் தலைமையில் இப்படி நடக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

இப்படியாக அவர்கள் உறுதியாக நம்பியிருக்கும் போது ஆர்பர் அம்மையார் அப்படியானதொரு பரிந்துரையைச் செய்யவில்லை என்றதும் உள்ளதை உள்ளபடியாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை. முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத்தின் போதும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை விமர்சித்துத் தீர்மானம் ஒன்றை முன்வைக்கும் என அவர்கள் நம்பிக்கையோடு கூறிவந்தார்கள்.

எதிர்பார்த்தது நடைபெறவில்லை என்ற போது அதற்குப் பல காரணங்களை அவர்கள் கூறினார்கள். ஆயினும் அவர்கள் எதிர்பார்த்தபடி லூயிஸ் ஆர்பர் செயற்படவில்லை என்பதால் அதனை விளக்க புதியதொரு உத்தி அவர்களுக்குத் தேவைப்பட்டது.

லூயிஸ் ஆர்பர் சொன்னவை ஐ.நா. கண்காணிப்புக் குழுவொன்றை அமைப்பதற்கான பரிந்துரையாகவே இருந்தது எனக் கொள்வது அவர்களுள் நேர்மை குறைந்தவர்களுக்குக் கவர்ச்சியாகத் தோன்றியிருக்கலாம்.

ஆயினும் அப்படிச் செய்வது சிக்கல் நிறைந்ததாக இருந்ததால் அவர் சொல்லாததை சொல்லியதாகக் கூறுவதே இலங்கைக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுவழியாக அமைந்தது. ஒரு பொய்யைச் சத்தமிட்டு அடிக்கடி கூறுவதன் மூலம் அது உண்மையாக இருக்கலாம் என்ற நம்பிக்கை தோன்றும் என்பதை அன்று ஜேர்மனியில் கொயபல் நிரூபித்துக் காட்டியிருந்தார்.

பொய்ப் பிரசாரத்தின் ஆரம்பமாக திருமதி ஆர்பரின் பேச்சினை சில கணங்களும் அதன் பின் நீண்டதொரு சிங்கள மொழிபெயர்ப்பையும் வானொலி நிலையம் ஒன்று ஒலிபரப்பிய போது இவை அனைத்துக்கும் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் தெட்டத்தெளிவாகத் தெரிந்தது.

ஒலிபரப்பிய விடயம் அவ்வம்மையார் சொன்னவற்றுக்கு மாற்றமாக இருந்தது. ஆயினும் செய்தி அறிக்கைக்கு முன் முக்கியமானதொரு செய்தியாக கண்காணிப்புக் குழுவொன்று அமைப்பதற்கான திருமதி ஆர்பரின் பரிந்துரைக்கு ஐ.தே.க. அதன் முழு ஆதரவையும் வழங்குவதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறியதாக அறிவிக்கப்பட்டது.

ஐ.நா.சபை இங்கு கண்காணிப்புக் குழுவொன்றை அமைப்பதைத் தடுக்க முடியாது எனவும் அப்படி அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் முனைந்தால் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும் அவர் கடந்த மாதம் கூறியது ஞாபகத்துக்கு வரலாம்.

இந்நிகழ்ச்சி நிரலின் நோக்கம் என்ன? அவர்கள் வெற்றி கண்டால் தாம் அடையும் நோக்கங்கள் பற்றி இந்நிகழ்ச்சி நிரலை முன்வைப்பவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது புரியாமல் இருந்தாலும் அவை புலிகளின் நோக்கங்களுக்கு ஒத்ததாயிருக்கின்றன என்பதை அவர்கள் கவனிக்காதிருக்க முடியாது. லூயிஸ் ஆர்பர் எதனைக் கூறினார் என்பதற்கு தான் விரும்பியவாறு அர்த்தம் கற்பித்த முதலாவது பின்னலமைப்பு தமிழ் நெற் இணையமாக இருக்கலாம் என்பதோடு அவ்வறிக்கை சர்வதேச ரீதியாக பிரதி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அதன் ஆதரவாளர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்.

தான் ஒரு உதைபந்தாக இருக்க விரும்பவில்லை என்பதில் திருமதி ஆர்பர் உறுதியாக இருந்தால் இவை அனைத்தையும் தவிர்த்துக்கொள்ளலாம். இப்போது திருமதி ஆர்பர் சொன்னவை திரித்துக்கூறப்பட்டிருப்பத

எதிர்பார்த்த விடயம் அறிக்கையாக வந்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.