Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்

 

10 Dec, 2024 | 02:11 AM
image
 

தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் தேசிய ஷுரா சபை பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

 மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை (6) சந்தித்த தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட அடிப்படையில் கலந்துரையாடியிருந்தனர்.

 இதன்போது பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்த அப்பிரதிநிதிகள், முன்னுரிமை வழங்கி தீர்வுகாணப்படவேண்டிய 27 விடயங்களை உள்ளடக்கி தாம் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வழங்கியிருந்த ஆவணத்தை டில்வின் சில்வாவிடம் கையளித்தனர்.

 அதேபோன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளடங்கலாக நாட்டின் சகல துறைகளுக்கும் அவசியமான பங்களிப்பை வழங்கக்கூடிய அறிவும் திறனும் உடைய பலர் முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விதமாக சமூக மட்டத்திலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

 அதேவேளை தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் தமது சமூகம் கொண்டிருக்கும் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அப்பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினர். 

மேலும் அராபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் பணத்தில் அவர்களது பங்களிப்பு 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும் டில்வின் சில்வாவிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இந்நாடுகளுடன் வலுவான தொடர்பைப் பேணவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர். 

 
  •  
  • கருத்துக்கள உறவுகள்

சூரா சபை யாரிடம் போனது தெரியுமா....மாகாணசபை இல்லாதொழிப்போம் என்றுஸத்தம் போட்ட டிஸ்வின்  சில்வாவிடம்...சோ (++ ++ ++)௳இய்ழ்ன் குடுமி சும்மா ஆடாது ..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

மேலும் அராபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் பணத்தில் அவர்களது பங்களிப்பு 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும் டில்வின் சில்வாவிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இந்நாடுகளுடன் வலுவான தொடர்பைப் பேணவேண்டியது அவசியம் என்றும்

அரபுநாடுகளுக்கு வேலைக்கு இலங்கையர்களை அனுப்பி வைப்பதே அரசாங்க அனுமதியுடன்தான்,  அது என்னமோ அரசாங்கத்துக்கு தெரியாத மாதிரியும் இவர்கள்தான் அவர்களை அங்கு அனுப்பி இலங்கைக்கு வருமானம் பெற்று தருவது மாதிரியும்  நினைவூட்டுறது மாதிரி இருக்கு.

பெரும்பாலான இந்திய இலங்கை முஸ்லீம்களின் நினைப்பு எல்லாம், அரபுநாடுகள் எல்லாம் என்னமோ அவர்கள் நாடு போலவும் இவர்களுக்கு ஒன்று என்றால் அரபுநாடுகள் களத்தில் குதிக்கும் என்பது போலவும் இருக்கும்.

பாலஸ்தீன பிரச்சனையில் அரபுநாடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதை பார்த்த பின்னரும் அரபுநாடுகளை காட்டி தாம் வாழும் நாட்டு பிரஜைகளையும் பிரதிநிதிகளையும் அச்சுறுத்தவதுபோல்  இவர்கள் கருத்து பகிர்வது நகைச்சுவையின் உச்சம்.

முஸ்லீம்கள் என்பதற்காக இவர்களை அரபுநாடுகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது, வேண்டுமென்றால் ரமழானுக்கு பேரீச்சம் பழம் அனுப்பியும் , பள்ளிவாசல் மதராசா கட்டவும் உதவி செய்யும்  மற்றும்படி அந்தந்த நாட்டு அரசுகளுடனேயே அவை தொடர்பைபேணும்.

அதற்கு மிக சிறந்த உதாரணம் முஸ்லிம்களுக்கெதிராக மிக மோசமான தாக்குதலை தொடுக்கிறார் என்று கூறப்படும் மோடியுடன் அரபுலகநாடுகள் மிக நெருக்கமான பொருளாதார அரசியல் இந்து கலாச்சார உறவுகளை பேணுவது.

  • கருத்துக்கள உறவுகள்

 அதல்ல இவர்களின் பிரச்சனை, சிங்களத்தோடு சேர்ந்து தமிழருக்கு ஆப்பு செருகினதும், அவர்களோடு வரிஞ்சு கட்டிக்கொண்டு நின்று, எதையும் பெறவிடாது தட்டிப்பறித்ததும், இப்போ வயிற்றை கலக்குது. எங்கே தாம் செய்தது தமக்கெதிராக மாறிவிடுமோ என்பதுதான் அவர்களது கவலை. சகல துறைகளிலும் திறனும் அறிவும் கொண்டவர்கள் நாட்டை நேசிப்பவர்களென்றால் அமைச்சரவையில் இல்லையாயினும் பங்களிக்கலாம், எதற்கு அமைச்சரவை வேண்டும்? ம்.... புலிகளை அழிப்பதற்கு அரசாங்கம் கேளாமலேயே தாம் உதவியதாக சொல்லி, வசதிகளை அனுபவித்தும், சிங்களம் விட்ட மிச்சத்தை கூட, இருந்து பொறுக்கியும் வளர்ந்தவர்கள். தமிழருக்கெதிராக சேர்ந்தியங்குவதும், பின்னர் எங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழரோடு சன்னதமாடுவதும் இவர்கள் பிழைப்பாய் போச்சு. ரில்வின் தனக்கு பதவி வேண்டாம் என்று விலகிவிட்டார், அவருக்கு வேறொரு பதவி இருக்கு, அது நேரம் வரும்போது வெளிப்படும். அவரிடம் ஏன் போனார்கள் இவர்கள்? ஒருவேளை, அவரது பொறுப்பு தெரிந்துதான் போனார்களோ அல்லது அவரே அழைத்தாரோ இவர்களை? 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 14:07, alvayan said:

மாகாணசபை இல்லாதொழிப்போம் என்றுஸத்தம் போட்ட டிஸ்வின்  சில்வாவிடம்.

அவர் அதற்காகவே பதவியிலிருந்து விலகினார் அல்லது விலக்கி வைக்கப்பட்டார் போலுள்ளது. அவர் தன்னிச்சையாக கத்தினால், விமல் வீரவன்சவோடு புதிய கூட்டணி அமைப்பார். இல்லையேல், மீண்டும் தமிழர் பிரச்சனை கிடப்பில், பத்தோடு பதினொன்று. அனுரா கூறியிருந்தார், தமிழ் மக்கள் தொடர்ந்து அரசுகளால் ஏமாற்றப்படுத்தப்பட்டத்தினாலேயே பொதுவேட்பாளர் என்கிற முடிவை எடுத்தனர் என்று. அந்த ஏமாற்றத்தை தராமல் இருப்பதே அவரின் கருத்துக்கு அழகு. இல்லையேல் ரில்வின் சில்வாவை வைத்து விளையாட வெளிக்கிட்டால் அதன் பயனை அடைவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சூரா இனத்துக்கு தன் மானப் பிரச்சனை...தமிழரை விட நாம் என்னத்தில் குறைவு என்பதுதான்...  இப்ப ஒரு புதுக்கரடி...10 ஆவ்து  பார்லிமெண்டில் 20..20 முசுலிம் எம்பிக்கள் ..இருக்கினமாம் ..இதிலும் தாங்கள்தான் முதலாம்..என்ன செய்வது நம்ம தலையெழுத்து..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.