Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள்

10 Dec, 2024 | 12:16 PM

image

ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

haiti_viole.jpg

வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பில்லிசூன்யம் செய்பவரிடம் பெலிக்ஸ் தனது உடல்நிலை குறித்து தெரிவித்தவேளை அவர் அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் பில்லிசூன்யம் செய்துள்ளனர் என  தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளை இறந்ததை தொடர்ந்து உள்ளுர் வன்முறை கும்பலின் தலைவர் படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது 60வயதுக்கும் மேற்பட்ட 60 பேர் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சனிக்கிழமை 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சொலெயில் என்ற வறிய மக்கள் அதிகம் வாழும் நகரத்திலேயே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது
 

 

https://www.virakesari.lk/article/200879

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போகிறோம்?????😭

  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்ட்டியில் வயதானவர்களை குறிவைத்து வன்முறை; 184 பேர் கொலை!

ஹெய்ட்டியில் வயதானவர்களை குறிவைத்து வன்முறை; 184 பேர் கொலை!

ஹெய்ட்டியின் சிட் சோலைல் (Cite Soleil) பகுதியில் கடந்த வார இறுதியில் சுமார் 184 பேர் கொல்லப்பட்டதாக அந் நாட்டு பிரதம அமைச்சரின் அலுவலகம் திங்களன்று (09) கூறியது.

தாக்குதல் தொடர்பில் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு (RNDDH), ஒரு உள்ளூர் கும்பல் தலைவரின் மகன் நோய்வாய்ப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது.

சிறுவனின் மர்ம நோய்க்கு “சூனியம்” செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டிய பில்லி சூனியப் பாதிரியாரிடம் கும்பலின் தலைவர் ஆலோசனை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறிய ஐ.நா, வன்முறையை மேற்கொண்ட கும்பல் உயிரழந்தவர்களின் உடல்களை எரித்து கடலில் வீசியதாகவும் குறிப்பிட்டது.

இந்தக் கொலைகளுடன் ஹெய்ட்டியில் இந்த ஆண்டு வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்தையும் விஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

https://athavannews.com/2024/1411667

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தனது பிள்ளை இறந்ததை தொடர்ந்து உள்ளுர் வன்முறை கும்பலின் தலைவர் படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதையும் ஆராய்ந்து அறியத்தெரியாத முட்டாள்களை இப்படித்தான் பலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதில், இவர் தலைவனாம் முதலில் அந்தப்பாதிரியாரை கைது செய்ய வேண்டும்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.