Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 DEC, 2024 | 01:11 PM

image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுசேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மின்சார பொது சேவை சங்கத்தின் காரியாலயத்தில்  வியாழக்கிழமை (12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது. பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாங்களும் போனஸ் கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

மின்சார சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது  குறிப்பிட்டுக் கொள்கிறார்.

ஆட்சிமாற்றம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது. நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார்.

https://www.virakesari.lk/article/201077

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார்.

ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். 

உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................

எல்லாமே மாஃபியாவா நாட்டில்.....................🫣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். 

உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................

எல்லாமே மாஃபியாவா நாட்டில்.....................🫣

இதில் மட்டுமல்ல.....எல்லா விசயத்திலையும் நடக்கப் போவது இதுதான்....எம்முடைய விசயத்துக்கு...பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ...லண்டன் கிருபாகரன்...எப்படியும் இந்தப் படம் 5 வருசத்துக்கு ஓடும்.. நாம தியேட்டரிலும் பார்த்து..ஓ ..டி.டி யிலும் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2024 at 16:48, ரசோதரன் said:

ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். 

உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................

 

சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர்
ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள்
ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர்
இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.