Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 Jan, 2025 | 03:43 PM
image
 

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது.

100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அதிக விலையில் பாற்சோற்றை உண்ணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்கும்போது 170 ரூபாவாகக் காணப்பட்ட சிவப்பரிசியின் விலை தற்போது 280 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

100 நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். 

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபா வரியைக் குறைத்து, உள்நாட்டு சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

விலை சூத்திரம் இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வாண்டிலிருந்து எரிபொருளுக்கான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அமைச்சர்களின் பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மக்கள் இதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவில்லை.

விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைத்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவோம் என்றார். 

மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியடைந்த அரசியல்வாதிகளெல்லாம், கூடிப்பேசி, கருத்து தெரிவிக்கிறார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு. காரணம் இந்த அரசில் அதிகம் பாதிக்கப்படப்போவது ,ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். அதனால் அவர்களே அதிகம் மக்கள் பற்றி கவலைப்படுகிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் செய்தது போதுமென்றே இவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இவர்கள் காலத்தில் தேனும் பாலும் ஓடியதுபோல பீலா விடுகிறார்கள். படிக்கிற காலத்தில் சில பிள்ளைகள், தாங்களே தவறு செய்து விட்டு முதலில் ஓடிப்போய் ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவனை குற்றம்சாட்டுவது போலுள்ளது, இன்றைய போலிப்பணக்காரர், அதிகாரிகள், அரசியல் வாதிகளின் குற்றச்சாட்டுக்கள். இதில தாங்கள் தலைவர், மக்களுக்கு சேவை செய்கிறோம் என்கிற எண்ணம் வேறு.

இதை மக்கள் சொல்லவில்லை, அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். "ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று."   

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

76 வருடமாக ஊழலிலேயே ஊறிப் போனவர்களுக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தையே எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

76 வருடமாக ஊழலிலேயே ஊறிப் போனவர்களுக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தையே எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.

அதுமட்டுமல்ல, இந்த அரசை தொடரவிட்டால், தாங்களும் மக்களின் நிலைக்கு தாழ்ந்து வரவேண்டுமே என்கிற பயமும் கூட. மக்களின் பணத்தை இதுவரை காலமும் சுரண்டி கொழுத்திருப்பவர்கள், இனிமேல் தங்கள் பணமும் சுரண்டப்படுவதை தவிர்க்க முயலுகிறார்கள்.        

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

இவர்கள் அரசியலுக்கு வரும்போது, மக்களுக்கு கூறிய விடயங்களை, அரசியலில் இருந்து போகும்போது கூட நிறைவேற்றாதவர்கள், நாள்க்கணக்கு காட்டுகிறார்கள். இவர்கள் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்திருந்தால்; அதன் கஸ்ரம், நிறைவேற்ற எடுக்கும் காலம் தெரிந்திருக்கும். அரசியலுக்கு வந்த உடனேயே, யார், எவ்வளவு பணம், எப்படி சேர்ப்பது என்கிற குறியிலேயே இருந்திருப்பார்கள். அவற்றை தேடி சுத்தப்படுத்தவே காலம் காணாது. இது எல்லாம் மக்களுக்கு தெரியாதென நினைத்து மக்களுக்காக அழுகிறார்களாம். அங்காலை ஒருவர், முடிந்தால்; நாங்கள் ஊழல் செய்தோம் என்பதை நிரூபியுங்கள் என்று சவால் விட்டவர், இப்போ எங்களை விமர்சிப்பதை விட்டு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்கிறார். மக்களுக்கு மூன்று வேலை உணவு கொடுத்தாலே போதும் என்கிறார். மக்களின் தேவை அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ? இன்னொரு கூட்டம், பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சபா நாயகரை பற்றி இன்னும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஊழலை  விசாரிப்பதை விமர்சிக்கிறார்கள் எதிர்க்கிறார்கள்.  வேறொருவர் கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அனுராவுக்கு சவால் விடுகிறார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அவசரம். இவர்களுக்கிடையில் மாட்டுப்பட்டு அவதிப்படுவது மக்கள்தான். மக்களை வைத்து தாம் பிழைப்பதும் தம்மை மறைப்பதுமே இவர்கள் செய்வது.           

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.