Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 JAN, 2025 | 08:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த  தரப்பினருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. இதனால்  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நலன்புரி திட்டம்  மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த  காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக  வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களில்  8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற  தொகை   ஆரம்பத்தில்  வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீன் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11790 பேருக்கு  மீள்குடியேற்ற  தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26209 பேருக்கு  இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு - வாகரை, வவுனியா - வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி,  மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு,   திருகோணமலை மற்றும்  அம்பாறை ஆகிய  மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு  இன்றுவரை இந்த   இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு  விண்ணப்ப படிவங்களை நிரப்பியே  அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம்  கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது.  அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில்  சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் மிக கொடூரமான முறையில் பொலிஸாரினால்  தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு  பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.  லன்டனில் உள்ள ஒருவர் தன்னை  தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு,  சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில்  நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.

1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில்  சொந்த  இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல்  1983ஆம் ஆண்டு  மலையகத்தில் இருந்து 2000 எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம்  செய்யுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/203434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.