Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது.

தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது.

அதேபோல் காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,500 பொலிஸாரட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1416273

  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் முரண்டு பிடித்த 'ஹிட்லர்' - என்ன நடந்தது?

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த ஹிட்லர் என்ற மாடு
14 ஜனவரி 2025, 04:07 GMT
புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 12 பேருக்கு காயம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது சுற்றில் காளை குத்தியதில் இடுப்பில் காயமடைந்த மாடு பிடி வீரர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டில் 12 பேர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்பது நபர்கள் வீடு திரும்பி விட்டனர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி தற்போது வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.

 
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது?

முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். இரண்டாம் சுற்றில் விளையாடிய திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவர் இடுப்பில் காலை குத்தியதில் காயமடைந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சேது ராஜன் என்பவர் வாடிவாசலில் தனது காளையை அவிழ்க்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக காலில் அரிவாள் வெட்டியதில் காயமடைந்தார். தற்போது அவனியாபுரம மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறிய அளவில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விதிகளை மீறி 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மாடு பிடிக்கும் வீரர்கள் இடையே இருப்பதை கண்டறிந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை வெளியேற்றினர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6:30 மணிக்கு துவங்கியது.

'ஹிட்லரால்' அரைமணி நேரம் தடைபட்ட ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த 'ஹிட்லர்' என்ற மாடு வாடிவாசல் பாதையில் 10 நிமிடம் படுத்துக்கொண்டதால் கால் மணி நேரம் மாடுகள் வெளிவருவதில் தடங்கல் ஏற்பட்டது. வெளியே வந்த பின்னும் படுத்துக்கொண்ட அந்த மாட்டை காவல்துறையினர் வெகு நேரம் போராடி வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறையின் அவசர சிகிச்சை வாகனம் கொண்டுவரப்பட்டு மிகுந்த சிரமத்துக்குப்பின் மாடு ஏற்றிச் செல்லப்பட்டது. முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது.

போட்டி நேரம் நீட்டிக்கப்படுமா?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும்.

டிராக்டர், கார் - காத்திருக்கும் பரிசுகள்

போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரு அண்டா, ஒரு வேஷ்டி பரிசாக வழங்கப்படுகிறது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பார்வையாளர்கள் உற்சாகம்

போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால மருத்துவ தேவைக்காக குழுக்களும், கால்நடை மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

Avaniyapuram Jallikattu: பலியான உயிர்; வாடிவாசல் பகுதிக்கு மீண்டும் திரும்பிய மாடுகள்; என்ன நடந்தது?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு jஜனவரி 14ஆம் தேதி நடைபெற்றது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வெளிநாட்டவர் தகுதி நீக்கம் - சமீபத்திய தகவல்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
9 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 16) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் வந்துள்ளனர்.

 

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும்போது டோக்கன் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 7 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். களத்தில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் அவர் வழங்குகிறார். இந்நிகழ்வின்போது, உதயநிதியின் மகன் இன்பநிதி உடனிருந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தபோது

வெளிநாட்டை சேர்ந்தவர் தகுதிநீக்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் இன்று காலை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்றார்.

அவரது வயது மூப்பை காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்குவதற்கு தகுதி நீக்கம் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அவருக்கு வயது 54. இது வரை கான் உட்பட 13 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலை 10.00 மணி நிலவரப்படி,

பரிசோதனைக்கு வந்த மொத்த காளைகள் - 201

பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டவை - 200

பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காளைகள் - 0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, கான் வயது மூப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

முதல் சுற்று முடிவு

முதல் சுற்று முடிவில்,

களம் கண்ட காளைகள்: 110

பிடிபட்ட காளைகள்: 14

இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவர்கள்: 4

சூர்யா (Y 3) - 3 காளைகள்

தினேஷ் (Y 50) - 2 காளைகள்

கண்ணன் (Y 24) - 2 காளைகள்

கௌதம் (Y 28) - 2 காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மூன்றாம் சுற்று முடிவின் நிலவரம்

தகுதியான மாடுபிடி வீரர்கள்: 314

தகுதி நீக்கம்: 33

போலி டோக்கன்கள்: 13

வயது மூப்பு: 01

மொத்தம்: 347

போலி டோக்கன் பெற்ற 13 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசுகள் விவரம்

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுவதுடன் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

அலங்காநல்லூர் போட்டியை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கப்பட்டு அவர்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வெளிநாட்டவர் தகுதி நீக்கம் - சமீபத்திய தகவல்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் இன்று காலை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்றார்.

அவரது வயது மூப்பை காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்குவதற்கு தகுதி நீக்கம் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அவருக்கு வயது 54. இது வரை கான் உட்பட 13 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலை 10.00 மணி நிலவரப்படி,

பரிசோதனைக்கு வந்த மொத்த காளைகள் - 201

பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டவை - 200

பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காளைகள் - 0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

படக்குறிப்பு, கான் வயது மூப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வெள்ளைக்காரன் எப்படி மாடு பிடிக்கிறான் என்று பார்ப்போம் என்றால்,
அவரை… வயது மூப்பு காட்டி நீக்கி விட்டார்கள். 🥲

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.