Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Screen-Shot-2025-01-12-at-12.57.05-AM.pn
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
 
 

இலங்கையில் இந்தி மொழியைப் பரப்புவதற்கான உத்தியோகபூர்வமான முயற்சி நேற்று எடுக்கப்பட்டிருக்கிறது. திறந்த மற்றும் தூரக் கற்கை மூலம் மாணவர்கள் இந்தி மொழியில் சான்றிதழ் பட்டத்தைப் பெறும் வசதியை சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மேற்கொண்டிருக்கிறது. உலக இந்தி தினத்தின் 50 ஆவது வருட நிறைவையொட்டி ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரத் – சிறீலங்கா சம்மேளனத்தின் ஒரு அங்கமாக இச்சான்றிதழ் வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் நாடு தழுவிய ரீதியில் இக்கற்கை நெறியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகில் அதிகரித்து வரும் இந்தி மொழிப் பாவனையைக் கருத்தில் கொண்டு இலங்கையின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

 

உத்தியோக பூர்வமாக இக்கற்கை நெறி நேற்று (ஜனவரி 11) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை உயர்கல்விக்கான அமைச்சர் டாக்டர் மதுரா செனிவிரத்ன, பல்கலைக்கழக மானிய ஆணையத் தலைவர் பேரா. கபில செனிவிரத்ன மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.எம்.சீ. திலகரத்ன ஆகியோர் இவ்வாரம்ப விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விழாவில் பேசிய டாக்டர் மதுரா செனிவிரத்ன இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான தகவற் பாலமாக இந்தி மொழியே இருக்குமெனவும் இந்திய இசையும் சினிமாவும் உலகில் இந்தி மொழியைப் பிரபலமாக்கி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இக்கற்கைத் திட்டத்தில் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள். 25 சிறப்புப் பேச்சாளர்கள் பங்குபற்றிய மூன்று முழுநேர அமர்வுகள், இந்தி மொழியின் கலாச்சாரச் சிறப்பைக் கொண்டாடும் வகையிலான கவிதை வாசிப்பு, இருநாடுகளுக்குமிடையிலான பாரம்பரியப் பொதுமையை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தற்காலக் கல்வியில் இந்தி மொழியின் பங்கு பற்றிய திறந்த உரையாடல் ஆகிய நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றிருந்தன.

நிகழ்வின் முடிவில் பொலிவூட் திரைப்படமான இங்லிஷ் விங்லிஷ் திரையிடப்பட்டது.

இலங்கையில் தற்போது 88 பாடசாலைகளிலும், 9 அரச பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

https://marumoli.com/இலங்கையில்-இந்தி-முதலாவ/

  • கருத்துக்கள உறவுகள்

சீனனுக்கு வைச்சாண்டா ஆப்பு...இனி அமெரிக்க நெருப்புமாதிரி..புசு புசெண்டு ..இந்தி பரவும்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

சீனனுக்கு வைச்சாண்டா ஆப்பு...இனி அமெரிக்க நெருப்புமாதிரி..புசு புசெண்டு ..இந்தி பரவும்..

ஹிந்தி வெறியர்கள் ஹிந்தியை பரப்ப உருது வெறியர்கள் உருதை பரப்ப ...அரபு வெறியர்கள் அரபை பரப்ப...தமிழ் வெறியர்களும் ,சிங்கள வெறியர்களும் அடிபட வேண்டியது தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஹிந்திப்படம் பார்க்க என்றாலும் உதவும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.