Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 JAN, 2025 | 03:47 PM
image
 

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். 

கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 

Assit._High_com__2_.jpg

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டாடும் அதே விதமாக இங்கு கொண்டாடப்பட்டமை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும், மகளிர் குழு ஒன்று ஒழுங்கு செய்தமை எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான பொதுப் பணிகளில் மகளிர் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஊக்குவித்தல் வேண்டும். ஆனால், இங்கு நடந்த வைபவத்தை நோக்கும்போது மேற்படி பெண்களது தொழிற்பாட்டுக்கு ஆண்கள் துணையாக நின்றிருப்பர் என என்னால் உணர முடிந்தது. இது இன்னும் வரவேற்கத்தக்க விடயமாகும். 

அந்த வகையில் இதனை ஒழுங்கு செய்த கண்டி இந்து மகளிர் அமைப்பு மற்றும் அதற்கு துணையாக நின்ற பொது அமைப்புக்கள், இவர்களுக்கு ஊக்கம் வழங்கிய ஆண்கள் எனப் பலரையும் பாராட்டுகிறேன் என்றார்.

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் தலைவி ஆர். கலையரசி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் விசேட அதிதிகளாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா அபேசிங்க, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேசா பெர்னாண்டோ உட்பட கண்டி நகர வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தகொண்டனர். 

Assit._High_com__4_.jpg

Assit._High_com__1_.jpg

https://www.virakesari.lk/article/204350

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
20 JAN, 2025 | 03:47 PM


 

Assit._High_com__2_.jpg

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டாடும் அதே விதமாக இங்கு கொண்டாடப்பட்டமை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

 

 

 

 

 

 

 

 

https://www.virakesari.lk/article/204350

இதில் இருந்து தெரிவது என்னவெனில்...யாழ்ப்பாணம் ,கண்டி என்பவை இந்தியாவின் ஒருபகுதியாகிவிட்டன....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.