Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா  நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில்  3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பதிலளித்ததாவது,

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமானது

2014 - 2015 ஆண்டுகாலப்பகுதியில் 16.4 பில்லியன் ரூபா

2015 - 2016 ஆண்டுகாலப்பகுதியில் 12.6 பில்லியன் ரூபா

2016 - 2017 ஆண்டுகாலப்பகுதியில் 28.9 பில்லியன் ரூபா

2017 - 2018 ஆண்டுகாலப்பகுதியில் 17.2 பில்லியன் ரூபா

2018 - 2019 ஆண்டுகாலப்பகுதியில் 44 பில்லியன் ரூபா

2019 - 2020 ஆண்டுகாலப்பகுதியில்  47.1 பில்லியன் ரூபா

2020 - 2021 ஆண்டுகாலப்பகுதியில் 45.2 பில்லியன் ரூபா

2021 - 2022 ஆண்டுகாலப்பகுதியில் 166.3 பில்லியன் ரூபா

2022 - 2023 ஆண்டுகாலப்பகுதியில் 73.6 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளது. 

அத்துடன்  2023 - 2024 காலப்பகுதியில்  3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது.

நிறுவனத்தின் முறைகேடான நிருவாகம், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும், விமானங்களின் நிறுத்துகை நஷ்ட ஈடுகளை செலுத்தியமை, மேலதிக வட்டியை செலுத்தியமை ஆகிய காரணங்களாலும் 2019, 2020 காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் பரவல் காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்த காரணங்களினாலும், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களாலும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

2023 - 2024 காலப்பகுதியில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இலாபமடைந்துள்ளது. நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கி    முன்னேற்றமடைவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ்! : 2023 - 2024 வரை 3.8 பில்லியன் ரூபா இலாபம்!   | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா  நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில்  3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

இது ரணிலுக்கே பெருமை சேர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இது ரணிலுக்கே பெருமை சேர்க்கும்.

பிள்ளை பிறந்தால் பிள்ளையின் பலனே வேலை செய்யும் ..இது சாஸ்திரம் ...அப்ப அனுரவின் பலன்தான்..வேலை செய்யிது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.