Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 JAN, 2025 | 08:49 PM
image
 

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது 244,092 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மாவட்டங்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூலத்துக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகும். இதுவே அதிகூடிய வெட்டுப்புள்ளியாகும்.

இதேபோன்று இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆகக் கூடிய வெட்டுப்புள்ளி 139 ஆகும். நுவரெலியா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 139 ஆகும். மேலும் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 138 ஆகும். இரத்தினபுரி மாவட்டத்துக்கு மாத்திரம் 136 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/204710

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய புள்ளி 188

Published By: DIGITAL DESK 3

24 JAN, 2025 | 03:28 PM
image
 

(எம்.மனோசித்ரா)

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஒரேயொரு பரீட்சாத்தி 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார். 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். 77.96 சதவீதமான மாணவர்கள் 70க்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

37.70 சதவீதமானோர் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 45 சதவீதமான மாணவர்கள் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 18 மாணவர்களில் 11 மாணவர்களும், 7 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் 140 மாணவர்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 76 பேரும், 64 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.

51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 15.02 சதவீதமானவர்கள் ஆண் மாணவர்களாவர். 17.10 சதவீதமானோர் மாணவிகளாவர். வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் சப்ரகமுவ மாகாணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் மாகாணம் இரண்டாவது இடத்தையும், ஊவா மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இரத்தினபுரி, குருணாகல், யாழ்ப்பாணம், மொனராகலை, கேகாலை, பதுளை, மாத்தறை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை வெளியிடுவதில்லை என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் 188 என்ற அதிகூடிய புள்ளியை ஒருவர் பெற்றுள்ளார்.

வெளியானதாகக் கூறப்பட்ட 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்ட போதிலும், அதன் மூலம் அதிக கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பலன் பெறவில்லை. காரணம் அவர்கள் குறித்த மூன்று வினாக்களுக்கும் சரியான பதில்களையே அளித்திருந்தனர். எனவே 3 புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தால் பாரிய பாதிப்புக்கள் எவையும் இல்லை என்றார். 

https://www.virakesari.lk/article/204785

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி; 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில்  அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதேவேளை, 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/314872

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.