Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

நாட்டில் அரக்கு மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கு நாளாந்தம் 690 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்கின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

83 சதவீதமான தடுக்கக்கூடிய இறப்புகள் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன.

மது மற்றும் புகையிலை பழங்கங்களே தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும்.

2022 ஆம் ஆண்டில், மதுபானம் ஊடாக வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் ஆகும். மதுவால் ஏற்பட்ட இழப்பு 237 பில்லியன் ரூபாய் ஆகும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் 40 முதல் 50 பேர் மது பழக்கத்தால் மரணமடைகின்றனர். இதனால் வருடாந்தம் 15,000 - 20,000 பேர் மரணமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதால் பல சிறுவர்கள் தந்தையை இழக்கின்றார்கள்.

மது அருந்துவதற்கான தற்போதைய போக்கு, பெரும்பாலான நிகழ்வுகள் பெரிய கூட்டங்களின் போது நிகழ்கின்றன என்பதைக் காட்டுகிறது. இதுவே மது பழக்கத்தை ஆரம்பிக்க முக்கி பங்கு வகிப்பதோடு, செல்வாக்கு செலுத்துக்கின்றது.

மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி செராம்,

2022 ஆம் ஆண்டு  நாளாந்தம் புகையிலை பயன்பாட்டுக்கு 510 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்துள்ளார்கள்.  

2019 ஆம் ஆண்டு  புகையிலை ஊடாக வரி வருமானம் 92.9 பில்லியன் ரூபாய் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் வருடாந்தம் புகையிலை நுகர்வு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கு 214 பில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.

இலங்கையில் மது அருந்து பழக்கம் குறித்த மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய பொதுக் கருத்துக் கணிப்பில்  பெரும்பாலான வயது வந்தவர்கள் மதுபானங்களின் விலைகளை 73 சதவீதாமாக அதிகரிக்கவும், 75 சதவீதாமாக  மது வரிவிதிக்கவும்  ஆதரவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மதுபானத்தக்கான வரி, வீட்டில் வெளிநாட்டு வகை நாய், மீன் வளர்ப்போருக்கான வரி, போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்கான தண்டப்பணம், கள்ள இந்திய மீன் பிடிக்காரர்களிடம் அறவிடும் பணம், ஆகியவை அதிகரிக்கப் பட வேண்டும்.

இது தவிர சுற்றுலாப் பயணிகளுக்கான மருத்துவச் செலவுக்கான பணம்,வீட்டில் சத்தமாக பாட்டுப் போடுவோருக்கு ஒலி மாசடைவதால் அதற்கு ஒரு வரி, சந்தியில் நின்று கூ அடிப்பவர்களுக்கு தனியே ஒரு தண்டப் பணம், you tube இல் கதைத்தே உழைக்கும் ஆட்களுக்கு வரி, social media பாவிப்பவர்களுக்கு வரி, காணி இருந்தும் தோட்டம் செய்யாதவர்களுக்கு வரி, வேலை செய்ய சகல தகுதிகளும் இருந்தும் வெளிநாட்டுக் காசில் வாழும் ஆட்களுக்குத் தண்டப் பணம் ( சமூகத்தில் சோம்பேறித்தனதுக்கு காரணமாவதால் ), இலவசமாய் படித்து விட்டு வேலையும் அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பட்டதாரிகள் போராடினால் அதற்கு ஒரு வரி, make up போட்டு சாம்பாதிக்கும்,icing cake செய்து சாம்பாதிக்கும் ஆட்களுக்கு என்று தனி வரி,என்று நாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

முக்கியமாக ஊரில் சமூக சீரழிவுகளுக்கு காரணமான சீமான் ஆதரவாளர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் என்று என்று தனி வரி போட்டால் இன்னும் நல்லம் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பகிடி said:

இலங்கையில்

  1. மதுபானத்துக்கான வரி,
  2. வீட்டில் வெளிநாட்டு வகை நாய்,
  3. மீன் வளர்ப்போருக்கான வரி,
  4. போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்கான தண்டப்பணம்,
  5. கள்ள இந்திய மீன் பிடிக்காரர்களிடம் அறவிடும் பணம்  ஆகியவை அதிகரிக்கப் பட வேண்டும்.

இது தவிர சுற்றுலாப் பயணிகளுக்கான மருத்துவச் செலவுக்கான பணம்,

  1. வீட்டில் சத்தமாக பாட்டுப் போடுவோருக்கு ஒலி மாசடைவதால் அதற்கு ஒரு வரி,
  2. சந்தியில் நின்று கூ அடிப்பவர்களுக்கு தனியே ஒரு தண்டப் பணம்,
  3. you tube இல் கதைத்தே உழைக்கும் ஆட்களுக்கு வரி,
  4. social media பாவிப்பவர்களுக்கு வரி,
  5. காணி இருந்தும் தோட்டம் செய்யாதவர்களுக்கு வரி,
  6. வேலை செய்ய சகல தகுதிகளும் இருந்தும் வெளிநாட்டுக் காசில் வாழும் ஆட்களுக்குத் தண்டப் பணம் (சமூகத்தில் சோம்பேறித்தனதுக்கு காரணமாவதால்),
  7. இலவசமாய் படித்து விட்டு வேலையும் அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பட்டதாரிகள் போராடினால் அதற்கு ஒரு வரி,
  8. make up போட்டு சாம்பாதிக்கும்,
  9. icing cake செய்து சாம்பாதிக்கும் ஆட்களுக்கு என்று தனி வரி

என்று நாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வளவும் நடக்க சந்தர்ப்பம் உள்ளது அண்ணை.

வருமானம் அதிகரிக்க வழி தெரியாமல் தவிக்கும் அரசிற்கு வழிகாட்டி என உங்கள் பெயர் வரவும் சந்தர்ப்பம் உள்ளது.

கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சத்தமாகப் போடும் பாடல்களில் இருந்து இதயத்தையும் கேட்கும் திறனையும் பாதுகாக்க கிட்டவே போவதில்லை!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சத்தமாகப் போடும் பாடல்களில் இருந்து இதயத்தையும் கேட்கும் திறனையும் பாதுகாக்க கிட்டவே போவதில்லை!!

உங்கை மட்டுமே இஞ்சை வெளிநாடுகளிலையும் சொல்லி வேலையில்லை.... அதை ஏதோ திறமை எண்டு நினைக்கினம் போலை....😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உங்கை மட்டுமே இஞ்சை வெளிநாடுகளிலையும் சொல்லி வேலையில்லை.... அதை ஏதோ திறமை எண்டு நினைக்கினம் போலை....😂

இளைஞர்கள் தான் அண்ணை மோசம். கிட்டவா போய் குறைச்சு போடச் சொல்லிற்று அங்கால போக கூட்டுவாங்கள்! நானும் அப்பிடியே வெளிக்கிட்டிடுவன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.