Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்?

நடராஜ ஜனகன்

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் முன்னெடுப்புகளே அதிகம் மேன்நிலை பெற்று வருகிறது.

இலங்கையின் ஆட்சி அமைப்பின் 77 வருட கால வரலாற்றைப் பார்க்கின்ற போது தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாததன் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோற்றம் பெறத் தொடங்கின. இவை இறுதியில் 30 வருட கால யுத்தம் என்ற நிலைவரை சென்றிருந்தது. இதன் காரணமாகவே ஊழல் மோசடி, கறுப்பு பண வெளியேற்றம், அந்நிய தலையீடுகள் என அனைத்தும் இடம்பெறத் தொடங்கின.

தற்போதைய ஆட்சியாளர் பெரிய அளவில் சாதிக்கப் போகின்றார்கள் என்பதன் காரணமாகவே வடக்கு, கிழக்கில் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் நிலை தோற்றம் பெற்றிருந்தது. ஆனால் புதிய ஆட்சியாளர்களும் நாட்டின் பிரச்சனைகள் தோற்றம் பெற மூல காரணியாக இருக்கும் தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வை கிடப்பில் போட்டுவிட்டு ஏனைய விடயங்களில் தமது கவனத்தைக் குவித்து வருகின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மாகாண சபைகளுக்கான பொலீஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க தயாரென கூறியிருந்ததுடன், பொலீஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்ற அனுமதியுடன் விடயங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாசா தான் பதவிக்கு வந்தால் பொலீஸ், காணி அதிகாரங்களை வழங்குவேன் என கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரா திசாநாயக்க பெரிய அளவில் வாக்குறுதியை வழங்காமல் மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை என்றதுடன், புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படும் என தெரிவித்திருந்தார். என்ன விதமான தீர்வு என்பது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பான தீர்வு முயற்சிகளை பொறுத்தவரையில் முதலாளித்துவ அரசியல் தளங்களில் அதிக நெகிழ்வுகள் தீர்வுக்கான ஆயத்த நிலைமைகள் காணப்படுகின்ற அதேவேளை, சோசலிச தளங்களில் தமிழ் மக்களுக்கான பொருளாதார விடையங்கள் தொடர்பான விடயங்களில் காட்டப்படும் அக்கறை அரசியல் தீர்வு தொடர்பில் ஒருவித தயக்கம் – மௌன போக்கே காணப்படுகின்றது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 58 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகப் போகின்றது. மேற்படி கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினர் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் பிரயோகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் போக்கு அரசாங்கத்திடம் இல்லை என்ற நிலை உறுதி பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களின் வறுமை நிலையை போக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதை வரவு – செலவுத் திட்டத்தில் பார்க்க முடியும். தேங்காய் விலை 250 ரூபாய் என்று நிலைக்கு சென்றுள்ளது. அரிசி தட்டுப்பாடு தொடர்கின்றது. வாழ்க்கைச் செலவு சுமை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. வறுமை நிலையில் வாழும் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வியல் மிகவும் துன்பம் நிறைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே புதிய ஆட்சியாளர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் படிப்படியாக தேய்ந்து வரும் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் அரசாங்கம் சரிவை சந்தித்து வருகின்றது. அண்மைக்காலத்தில் இருந்து வந்த ஆட்சியாளர்களோடு ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளரின் ஒடுக்குமுறை செயற்பாடுகள் அதிக ஒடுக்குமுறை கொண்ட ஆட்சியாக காணப்படுகிறது என அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலை வெளிவராததால் தனிப்பட்ட வியாபாரிகளின் ஈவு இரக்கமற்ற விலை கோரிக்கைக்கு இரையாகும் நிலையில் காணப்படுகின்றனர். தொடரும் இயற்கை அனர்த்தத்தால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை தண்ணீருக்கு இரையாக்கும் நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்.

தமிழர் தேசத்தை பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மீது குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து அவரை சென்னைக்குச் செல்ல விடாது தடுக்க முற்பட்டமையும் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தலையிட்டால் அவர் பயணத்தை தொடரும் நிலை ஏற்பட்டதை பாராளுமன்ற விவாதத்தின் போது பார்க்கக்கூடியதாக இருந்தது. பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்ட நிலைமை தொடர்பில் தனக்கான நீதியை வழங்குமாறு ஸ்ரீதரன் வேண்டி நிற்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்பது அச்சம் நிறைந்ததாக காணப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு ஏற்பட்ட இந்த நிலை கட்சியின் உட்பூசல் காரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்ற கதைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.

எனவே தமிழரசு கட்சி மிகவும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது என்பதே உண்மை நிலையாகும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நாட்டின் பொருளாதார விடயங்கள் தொடர்பில் போகும் இடமெல்லாம் அதிகம் பேசி வருகின்றார். முன்னைய ஆட்சியாளர் புரிந்த மோசடிகள், வீண்விரயம் தொடர்பில் எவ்வளவோ கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார். ஆனால் தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவர் இதனையும் கூறாது வருவது கவலை தரும் நிலையாகும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயம் கிடப்பில் தள்ளப்பட்டால் கிளின் ஸ்ரீலங்கா முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியே..

https://thinakkural.lk/article/315064

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.