Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் போராட்டம்!

February 4, 2025

 

இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி  லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது.

உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமாகி பிரிட்டிஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி இந்த பேரணி செல்லவுள்ளது. இந்த பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக்கொள்வதற்கு உதவவேண்டிய கடப்பாடு பிரிட்டனிற்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஸ் பிரதமருக்கும் மன்னர் சார்ல்ஸ் உட்பட உயரதிகாரிகளிற்கும் கடிதமொன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். தேசிய விடுதலை என்பது எங்களின் வரலாற்றுக்கடமை
 

https://www.ilakku.org/protest-in-london-demanding-the-right-of-self-determination-of-the-tamil-people/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை சர்வதேச கவனயீர்ப்பு போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர்.

இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனை கரிநாளாக கருத வேண்டும் என இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழ மற்றும் உலக தமிழர்களும் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர்.

‘தன்னாட்சிக்கான உரிமைக்குரல்’ என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த போராட்டத்தை தமிழர்கள் முன்னெடுத்தனர்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பிரித்தானிய அரசு தார்மீக அடிப்படையில் காத்திரமான அரசியல் இராஜதந்திர நகர்வை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உலகத்தமிழினமாக அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் அறைகூவல் விடுத்தனர்.

 

https://oruvan.com/a-solution-must-be-provided-to-the-tamils-of-eelam-in-accordance-with-the-vaddukottai-resolution-charcoal-day-protest-in-britain/

  • கருத்துக்கள உறவுகள்

1. நல்ல விடயம்.

2. ஆனால் நடந்த முடிந்த பின் போராட்டம் பற்றி தெரிய வருவதால் என்ன நன்மை?

3. காசை வாங்கி கொண்டு, கொடியோடு போட்டோ எடுத்து, ஆதரவு கடிதமும் வழங்கி, அகதி விண்ணப்ப பாவங்களிடம் பணம் பார்க்கும் வியாபாரமாக இல்லாமல் நல்ல நோக்கில் நடந்த போராட்டம் என நம்புவோம்.

4. ஏன் கிழமை நாளில் வைக்கிறார்கள்?

5. எது எப்படியோ எமக்கு குழிபறிக்கும் “பிறப்பும், வளர்ப்பும் நேர்த்தியில்லாத” இலண்டன் நாம்தற்குறிகளை விட இவர்கள் ஆயிரம் மடங்கு திறம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.