Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய.

“எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று  (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும்  காணப்படும்  பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக  குறித்த சேவைகளில் காணப்படும்  பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்தல்,நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் அரை அரச பாடசாலைகளில் கட்டணம் வசூலிப்பது, வகுப்பு அளவுகளை 35 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான வெட்டுப்புள்ளி பரீட்சைகளை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து  பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது, வெற்றிடங்கள் இல்லை எனில் மாணவர்களை சேர்க்காமல் இருத்தல், கல்வி அமைச்சு இதற்காக சிபாரிசு கடிதங்களை வழங்காது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர்,எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420399

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

09 FEB, 2025 | 07:55 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (09) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முககொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு உரிய தீர்வினைப்பெற்றுத்தருமாறும் தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே இந்த சந்திப்பின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இந்த நாட்டில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிபர்களும் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

குறிப்பாக பதவி உயர்வு தொடர்பில் விடயங்களை முன்வைத்தோம். இது குறித்து அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய சுற்றுநிருபம் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த வருடம் முதல் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எமக்கு வாக்குறுதியளித்தார்.

எனவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று இதன்போது ஆசிரியர் அதிபர் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத்தருவதாக பிரதமர் எமக்க உறுதியளித்தார் என்றார்

இந் நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக சுமார் 07கிலோமீற்றர் தூரத்திலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கும், சுமார் 09 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்திற்கும், சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமே செல்லவேண்டிய அவலநிலை காணப்படுவதால் குறித்த மன்னாகண்டல் பாடசாலையை தரம்-09 வரையாவது தரமுயர்ததித்தருமாறும் இதன்போது கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.  

இவ்வாறு தரமுயர்த்தினால் கனகரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பதற்காக வருகை தருவார்கள் எனவும் கிராமமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைவிட மன்னாகண்டல் கிராமத்திற்கான வீதிச் சீரமைப்பு, பொதுப்போக்குவரத்தை ஏற்படுத்தல், மன்னாகண்டல் கமக்கார அமைப்பிற்குட்பட்ட மூன்றாம் கண்டம் பகுதியில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 150ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்தல், எம்.பி கமம் விவசாய நிலங்களில் சுமார் 200ஏக்கரில்  மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு  உரமானியம் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல், முன்பள்ளியை இயங்கச்செய்தல், வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களை விடுவிப்புச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும், குறைபாடுகளும் மக்களால் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மன்னாகண்டல் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதொடர்பான மகஜர்களையும் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை மக்களால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகள்தொடர்பால் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206253

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.