Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 FEB, 2025 | 05:21 PM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை  (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்கான முன் ஆயத்த கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56 மில்லியன் ரூபாவினை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை  அடிப்படையில் பிரதேச செயலக ரீதியாக இந்த நிதியினை பயன்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரால் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீதி ஒதுக்கீடுகள் எவ்வாறு அமையவேண்டும், அதனை யார் செய்யவேண்டும் என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் தனது கருத்துகளை முன்வைத்ததை தொடர்ந்து, அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான  கஜேந்திரகுமார் காங்கேசர்  பொன்னம்பலம்,  கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர்  சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாள‌ர் எம். நந்தகோபாலன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

01__12_.jpg

01__11_.jpg

01__9_.jpg

01__10_.jpg

01__8_.jpg

01__5_.jpg

01__7_.jpg

01__3_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/206703

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.