Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-327.jpg?resize=750%2C375&ssl

சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக இந்திய மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான மீனவர்கள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாருக்கு வடக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட படகுகளுடன் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு இதுவரை 131 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 18 இந்திய மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

https://athavannews.com/2025/1422643

  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் கடலில் கைதான 32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் !


image

தலைமன்னார் கடற்பரப்பிற்குள்  அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால்   நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்  பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் கடலில் கைதான 32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் ! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.