Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெடித்த மாபெரும் போராட்டம்...! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.

மாபெரும் போராட்டம்

"தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் வெடித்த மாபெரும் போராட்டம்...! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் | Fishermen Stage Massive Protest In Jaffna

யாழ்ப்பாணம் நீரில் வளர்த்தினை களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர்.

இருப்பினும் துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையகடற்றொழிலாளர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகள் : பு.கஜிந்தன் மற்றும் பிரதீபன்

GalleryGalleryGalleryGallery

https://ibctamil.com/article/fishermen-stage-massive-protest-in-jaffna-1740634187

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெடித்தது மீனவர் போராட்டம் – கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில்!

25-67bff5eb5588a.jpg

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்  இடம்பெற்று வருகின்றது.

யாழ்.மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தீபக மீனவ அமைப்புகள் சேர்ந்து முன்னெடுத்துவரும் குறித்த போராட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துவிட்டு இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

“தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட பேரணி இந்திய துணை தூதரகத்தை அடைந்த நிலையில், அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திலிருந்து ஐவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

போராட்டக் களத்தில் கண்ணீர் புகை குண்டுகளுடன் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

https://www.samakalam.com/யாழில்-மீனவர்-போராட்டம்/

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதரகத்துடன் கலந்துரையாடலுக்கு சென்ற மீனவர்கள்!

Published By: DIGITAL DESK 2

27 FEB, 2025 | 12:02 PM

image

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர்.

துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மீனவர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

20250227_104412.jpg

20250227_103847.jpg20250227_104126.jpg

https://www.virakesari.lk/article/207813

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வந்து சில மூத்தபத்திரிகையாளர்களும் ,அரிவரி அரசியல்வாதிகளும் கேள்வி கேட்க போயினம் ..

முன்னைய அரசு இருக்கும்பொழுது ஏன் போராடவில்லை இப்ப போராடுவது சரியில்லை என சொல்வார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து… வெறுத்துப் போய், மீனவர்களும் பல அமைப்புகளாக சேர்ந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்குப் பிறகும்… இந்திய அரசு தனது மீனவர்களை எல்லை தாண்டாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

thoothuvar.jpg?resize=750%2C375&ssl=1

இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் பதற்றம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்புப்  போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் தமது போராட்டத்தினை ஆரம்பித்த  போராட்டக்காரர்கள், யாழ் மாவட்ட கடற்தொழில்நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளதோடு, அதனைத் தொடர்ந்து  யாழ் இந்திய துணை தூதரகத்தினை சென்றடைந்தனர். மேலும் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது  யாழ் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி, இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து  மகஜர் ஒன்றினை வழங்குவதற்கு போராட்டக்காரர்களுக்கு  அனுமதி வழங்கியதாகவும், இதனையடுத்து  போராட்டக்காரர்களில் சிலர் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார்  கண்ணீர் புகைகுண்டுகள் சகிதம் வருகை தந்து  இந்திய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கியிருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1423289

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.