Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானதாக்குதல் - விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார் டிரம்ப் - யாரை இலக்குவைப்பது என்பதை தளபதிகளே தீர்மானிக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 FEB, 2025 | 11:36 AM

image

cbs news

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தளர்த்தியுள்ளார்.

வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை  ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல் இழக்கச்செய்துள்ளது.

trump_and_milltary.jpg

மேலும் டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு திரும்பியுள்ளார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் சமீபத்தில் தனது முதலாவது வெளிநாட்டுபயணத்தினை மேற்கொண்டவேளை ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் ஆபிரிக்காவிற்கான கட்டளைத் தலைமையின் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தார், அவ்வேளை வான்வழித்தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினரை பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆவணத்தில் அவர் கைசாத்திட்டார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் வான்தாக்குதல்கள் அமெரிக்காவின் விசேட படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளது நெகிழ்ச்சி தன்மையை வழங்கியுள்ளது, என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், யாரை இலக்குவைப்பது என தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை தளபதிகளிற்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் தங்கள் பெயர் விபரங்களை வெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் இதனை சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

ஜோபைடனின் யுத்தகால கொள்கைள் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் கொள்கைகளே என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பைடனின் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் சிரேஸ்ட தலைவர்களை இலக்குவைத்தே தாக்குதல் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/207892

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.