Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 Mar, 2025 | 05:26 PM

image

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான “டெய்சி ஆச்சி” என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் இன்று (5) புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட டெய்சி ஆச்சி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

05 Mar, 2025 | 05:26 PM

image

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான “டெய்சி ஆச்சி” என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் இன்று (5) புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட டெய்சி ஆச்சி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை ! | Virakesari.lk

உண்மையான குற்றவாளிகள் ... உடனடியாக தப்பிவிடுவார்கல்..

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

10 Dec, 2025 | 05:33 PM

image

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுமளவுக்கு மன ரீதியாக தயார் நிலையில் உள்ளாரா என்பதை கண்டறிய, நாளை வியாழக்கிழமை (11) அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை (10) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி ஒக்ஸ்வால்ட் பெரேரா இதனை அறிவித்தார்.

அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை பரிசீலிக்கும் நோக்கில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. 

இருப்பினும், பிரதிவாதிகளுக்கு எதிரான மற்றொரு வழக்கு உயர்நீதிமன்ற எண் 08இல் விசாரணைக்காக இருப்பதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் இல்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். 

அதன்படி, நீதிமன்றம் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி மூலம் சிறப்பு வைத்திய அறிக்கையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதிவாதி டெய்சி ஃபொரஸ்ட் நாளை குறித்த மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகவுள்ளதோடு, பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முறைப்பாடு பரிசீலிக்கப்படும் என்றும், அதற்கிடையிலான விசாரணை ஒத்திவைக்கப்படும் என்றும் அரசு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த வழக்கு, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட  59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மூன்று வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்புச் செய்தமைக்கான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/232990

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.