Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா - அண்ணாமலை திடீர் சந்திப்பு!

Published:5th Mar, 2025 at 4:22 PM

இளையராஜா - அண்ணாமலை  சந்திப்பு.

இளையராஜா - அண்ணாமலை சந்திப்பு. 

தமிழ்நாடு

இளையராஜா - அண்ணாமலை சந்திப்பு தொடர்பாக...

Updated:5th Mar, 2025 at 4:22 PM

சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜாவை இன்று(மார்ச் 5) சந்தித்தார்.

இது குறித்து அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா, “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளது.

இதனை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: குற்றம்சாட்டப்பட்ட 40 எதிராளிகள் மீது நீதிமன்ற விசாரணை! ஆதரவாளர்கள் போராட்டம்!

இளையராஜா - எல். முருகன் சந்திப்பு .

இளையராஜா - எல். முருகன் சந்திப்பு .

இதனைத் தொடர்ந்து, மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜாவை சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

எல். முருகன தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.dinamani.com/amp/story/tamilnadu/2025/Mar/05/ilayaraja-annamalai-meeting


பழைய விகடன் கட்டுரை ஒன்று.

விடய பொருத்தம் கருதி இணைக்கிறேன் 👇.


இளையராஜாவின் மோடி பாசம்... பாஜக-வின் மெகா திட்டம்!

இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம்.

இளையராஜாவின் கருத்து குறித்து அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ``இந்த விஷயம் குறித்து நான் இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், `நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எதிராக விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. சொல்லப்போனால் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பா.ஜ.க-விலும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைப் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால், இருவர் குறித்து ஆராய்ந்து நான் முன்னுரையில் எழுதியிருந்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதை மோடி செய்து வருகிறார்' என்று என்னிடம் கூறினார்'' என்றிருக்கிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``இளையராஜாவின் கருத்து ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால், இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா? இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை'' என்று கூறியிருக்கிறார்.

இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பு

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம், ``இளையராஜா தனது சொந்தக் கருத்தைச் சொல்வதில் எப்போதும் தயக்கம் காட்டாதவர். அவருக்கு அரசியல், பதவி ஆசைகள் என எதுவும் இல்லை. ராஜ்ய சபா எம்.பி பதவிக்காகதான் இளையராஜா இப்படி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் புரளிதான். 2018-ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது பெற்றபோது, `மோடி தலைமையிலான மத்திய அரசு எனக்கு விருது வழங்கியதன் மூலம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் கௌரவித்துள்ளது' என்று பேசியிருந்தார் இளையராஜா. எனவே, எப்போதுமே அவருக்குப் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு உண்டு. திடீரென்றெல்லாம் அவர் இப்படிப் பேசவில்லை'' என்றனர்.

2017-ம் ஆண்டு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னணியில், பா.ஜ.க சில அரசியல் காய்களை நகர்த்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

``தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகக் கோலோச்சிவரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுவருகிறது. இந்த விழாவை ஒரு அரசு விழா போல நடத்த வேண்டுமென பா.ஜ.க தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் கங்கை அமரன் சமீபத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களிடையே பா.ஜ.க-வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. எனவே, இந்த விழாவின் மூலம் இளையராஜாவின் சமூக வாக்குகளை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது கட்சி மேலிடத்தின் திட்டமாக இருக்கிறது'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

https://www.vikatan.com/
No image preview

இளையராஜாவின் மோடி பாசம்... பாஜக-வின் மெகா திட்டம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.