Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதப் பிரச்சாரகர்கள் உட்பட 15 இந்திய பிரஜைகள் நாடுகடத்தப்பட்டனா்

adminMarch 9, 2025

blessing.jpg

சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டுக்குள்  சென்று  யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரச்சாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழுவினரால்  கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனா்.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி  குறித்த  செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அவர்கள்   கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாகளின் கீழ் நாட்டிற்கு சென்றுள்ளனா்.

அவர்களில் இருவர்,  யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் நோய்களை குணப்படுத்துவதற்கான தீவிரவாத மத சேவையை நடத்த தயாராகி வந்தனர்,  இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளால் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களை  நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் , யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும் 08 இந்தியப் பிரஜைகளும்  யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த   05 இந்தியப் பிரஜைகளும்  கைது செய்யப்பட்டு,   பலாலி விமான நிலையத்திலிருந்து   சென்னைக்கு நேற்று  சனிக்கிழமை (08) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/213022/

  • கருத்துக்கள உறவுகள்

மதம் பரப்புவது என்றவுடன் யேகோவா என்றே பலர் நினைத்துவிடுகின்றனர். இலங்கை தமிழர்களிடம் அதிகம் வேலை செய்வது evangelical தான்.

  • கருத்துக்கள உறவுகள்

10 Mar, 2025 | 10:30 AM

image

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.  

குறித்த குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடுகடத்தப்பட்டனர்.

இதேவேளை, இந்தியாவில் சுற்றுலா விசாவில் வந்து, யாழ்ப்பணத்தில் சிற்பவேலைகளில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் மற்றும் யாழில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்த ஐவர் என மேலும் 13 இந்தியப் பிரஜைகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

யாழில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை நாடு கடத்த முதல்....

சுன்னத்து செய்து, குல்லாவும் போட்டு நாடு கடத்தி இருந்தால்,

இனி ஒரு பயலும் இலங்கைக்கு, மதம் மாற்ற கிளம்பி வரமாட்டார்கள்.

இல்லாவிடில்... மீனவர் பிரச்சினை மாதிரி, இதுவும் தொடர்கதையாக இருக்கப் போகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.