Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-155.jpg?resize=750%2C375&ssl

பாகிஸ்தான் ரயிலில் பயங்கரவாத தாக்குதல்: 104 பணயக்கைதிகள் மீட்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தன.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலைப் படை (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது.

தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைத் தாக்குவதற்கு முன்பு தண்டவாளத்தில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உட்பட 104 பயணிகளை பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளதாக பாகிஸ்தானிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காயமடைந்த 17 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் அறிக்கைகளின்படி, பலூச் அரசியல் கைதிகளை அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பணையக் கைதிகளைக் கொன்றுவிடுவதாக போராளிகள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் அதிகாரிகள் – இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளும் BLA-வை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

https://athavannews.com/2025/1424865

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூர் அறிக்கைகளின்படி, பலூச் அரசியல் கைதிகளை அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பணையக் கைதிகளைக் கொன்றுவிடுவதாக போராளிகள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்

50 பயணிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-165.jpg?resize=750%2C375&ssl

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல்: பாகிஸ்தான் படையினரின் வெற்றிகரமான மீட்பு!

பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர், முற்றுகை முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை (12) மாலை தெரிவித்துள்ளது.

எனினும், பலூச் விடுதலை இராணுவத்தால் (BLA) இருபத்தொரு பயணிகளும் நான்கு துணை இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் அழித்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தான் ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

“அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்று, மீதமுள்ள பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் (புதன்கிழமை) மாலையில் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன” என்று லெப்டினன்ட் ஜெனரல் அகமட் ஷெரீப் கூறினார்.

கிளர்ச்சியாளர்கள் 60 பணயக்கைதிகளைக் கொலை செய்ததாக கூறிய சிறிது நேரத்திலேயே இராணுவத்தின் அறிக்கை வந்தது.

மேலும், இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் மேலும் பலரைக் கொலை செய்வதாக பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்தனர்.

பணயக்கைதிகளுக்கு ஈடாக பலூச் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.

செவ்வாய்க்கிழமை (11) ஒன்பது பெட்டிகளில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், குவெட்டாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் வெடிபொருட்களால் குறி வைத்து தாக்கப்பட்டது.

இதையடுத்து, பலூச் விடுதலை இராணுவத்தால் பயணிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ரயில் தாக்குதலைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் உட்பட பல முனை தாக்குதலை பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட நபர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அவர்களை கிளர்ச்சியாளர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உள்ளாடைகளை அணிந்த கிளர்ச்சியாளர்கள், பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து அருகில் உட்கார வைத்தனர், இதனால் மீட்பு நடவடிக்கை கடினமாக இருந்தது என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் காயமடைந்தவர்கள் மாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

whatsapp-image-2025-03-12-at-11-09-59-am

செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், நடவடிக்கை முடிவடைந்ததால் 300 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவர்கள் பயணிகள் ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை.

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற வேண்டும் என்று வாதிடும் பல்வேறு எதிர்ப்புக் குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக புதிய தீவிரமான தாக்குதலை அறிவித்து, பலூச் தேசிய இராணுவம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடந்தது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக அமைந்துள்ள பலூசிஸ்தான், பல ஆண்டுகளாக கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அண்மையில் பல பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்துள்ளது.

கிளர்ச்சிக் குழுக்கள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பலூசிஸ்தானின் சுதந்திரத்தை நாடுகின்றன.

பாகிஸ்தான் அரசாங்கத்தால் தாங்கள் பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்கொள்வதாக பலூச் சிறுபான்மையினர் கூறுகின்றனர்.

https://athavannews.com/2025/1424951

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும் நடவடிக்கை முடிவிற்குவந்தது – பிரிவினைவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்பிலிருந்தனர் என அதிகாரி தகவல்

Published By: RAJEEBAN

13 MAR, 2025 | 02:40 PM

image

பாக்கிஸ்தானில் பிரிவினைவாதிகளிடம் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளை மீட்கும் நடவடிக்கை முடிவிற்கு வந்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

பயணிகளை மீட்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம், அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் தொடர்பாடல்களிற்கான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் புகையிரதத்திலிருந்து வெளியேற்றிவிட்டோம் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

2025-03-12T163415Z_527060936_RC2QBDAQI5B

புகையிரதத்தில் 440 பயணிகள் இருந்தனர் என அவர் தெரிவித்துள்ள போதிலும் மீட்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை.

இதேவேளை ஒவ்வொரு கட்டமாக மீட்பு பணிகளை மேற்கொண்டோம், முதலில் சுமார் 100 விடுவித்தோம், இரண்டாவது கட்ட நடவடிக்கையின் போது விடுவிக்கப்பட்ட 80 பேர் மச் என்ற பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் டோவ்னிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரிவினைவாதிகளிடம் பிடிடபட்ட புகையிர பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு பொலிஸார் உட்பட பல பயணிகள் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளனர்.

21 பயணிகளும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வது மிகவும் கடினமான விடயம் மக்கள் குடியிருப்புகள் வீதிகள் போன்றவை இல்லாத இடம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பயங்கரவாதிகள் பெண்கள் சிறுவர்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதமேந்திய நபர்கள் புகையிரதத்தை சுற்றி ரோந்து வந்தனர், தங்களிடம் சிக்கியிருந்த பொதுமக்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர்.

விசேட படைப்பிரிவினர் பணயக்கைதிகளை மீட்பதற்காக மிகவும் அவதானமாக செயற்பட்டனர், தாக்குதல்கள் மூலம் எஞ்சியிருந்த கிளர்ச்சியாளர்களை செயல் இழக்கச்செய்த பின்னர் 68 பணயக்கைதிகளை மீட்டனர் என டோவ்னிற்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரியொருவர் நடவடிக்கை முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தை பிடித்து பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவேளை  பயங்கரவாதிகள் ஆப்கானில் உள்ள தங்கள் தலைவர்களுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்தனர் என லெப் ஜெனரல் ஷெரீவ் தெரிவித்துள்ளார்.

1312595029b1f6f.jpg

புகையிரதம் பிரிவினைவாதிகளிடம் சிக்குண்ட பகுதியையும் புகையிரதத்தையும் காண்பிக்கும் ஆளில்லா விமானப்படத்தையும் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் மூன்று குழுக்களாக பலர் புகையிரதத்தின் அருகில் அமர்ந்திருப்பதை காணமுடிகின்றது.

இது குறித்து விளக்கமளித்த அதிகாரியொருவர் பணயக்கைதிகளை புகையிரதத்தலிருந்து இறக்கி தற்கொலை குண்டுதாரிகளின் பாதுகாப்பில் வைத்திருந்தார்கள் இதனால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது கடினமாகயிருந்தது என பாக்கிஸ்தான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளை சினைப்பர்கள் மூலம் வீழ்த்தினோம், பணயக்கைதிகள் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என அந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209087

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.