Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.1130140913_.jpeg

ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது.

எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள்,

சிலந்தி இருப்பது

கூட்டுக்கு நடுவில் அல்லவா?

சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று.

போதாக்குறைக்கு

உலக வலைப்பின்னலிலும்.

...

இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து

தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது

ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி

இழைகளே அதை நெரிக்கின்றன

அதன் கூக்குரலோ

வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும்

யாருக்கும் கேட்பதாயில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தால்

தன்னைப் போலவே பல சிலந்திகள்...

சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு,

கழுத்தை நெரித்தாலும் -

மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது.

இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது

வலையைப் பின்னப்போய்

வாழ்க்கையை இழந்து விட்டேனே.

  • கருத்துக்கள உறவுகள்

யாரை குறி வைத்துள்ளீர்கள்?

ஏஐ வந்ததும் எல்லோருக்கும் படம் வரையும் வேலை சுலபமாகி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

யாரை குறி வைத்துள்ளீர்கள்?

ஏஐ வந்ததும் எல்லோருக்கும் படம் வரையும் வேலை சுலபமாகி விட்டது.

இது மிகவும் பொத்தாம் பொதுவாக மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றித் தான். நாங்களே சில கருதுகோள்கள், உறவுகள், நம்பிக்கைகளில் வலை பின்னி பின் அதற்குள் அகப்பட்டு விடுகிறோம், உண்மைகள் தெரிய வரும் போதும் அந்த வலைகளை அறுக்க முடிவதில்லை.

உண்மைதான், ஏஐ நாங்கள் நினைப்பதை வரைய உதவியாய் இருக்கிறது, சரியான வகையில் கட்டளைகளைக் கொடுத்தால்.

அதற்கு முதல் நம் கற்பனையில் நமக்கு என்ன வேண்டும் என்பது உதிக்க வேண்டும்.

பொதுவாகவே நமக்கு ஓவியத்தின் / ஓவியனின் அருமை தெரிவதில்லை, இனிமேல் ஏஐ க்கு பிறகு இன்னும் மோசமாகும் என்று தான் நினைக்கிறேன் 😆.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, villavan said:

இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது

வலையைப் பின்னப்போய்

வாழ்க்கையை இழந்து விட்டேனே.

பின்னிய இழைகளை உணர்ந்து அறுத்தாலும், சிலந்திக்கு ஏதோ பிரச்சனை போல என்று சொல்லி விடுவார்கள் போல.............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

பின்னிய இழைகளை உணர்ந்து அறுத்தாலும், சிலந்திக்கு ஏதோ பிரச்சனை போல என்று சொல்லி விடுவார்கள் போல.............🤣.

😅

உண்மை அண்ணை. முற்றும் துறந்து ஞானியானாத் தான் பிரச்சினை என்று பாத்தால், இல்லை, முயலுக்கு நாலு கால் தான் என்றாலும் பிரச்சினையாகவெல்லோ இருக்கு. உது பாதி ஆன்மிகம் பாதி சுய எள்ளல்.

Edited by villavan
spelling.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2025 at 02:48, villavan said:

அதற்கு முதல் நம் கற்பனையில் நமக்கு என்ன வேண்டும் என்பது உதிக்க வேண்டும்.

பொதுவாகவே நமக்கு ஓவியத்தின் / ஓவியனின் அருமை தெரிவதில்லை, இனிமேல் ஏஐ க்கு பிறகு இன்னும் மோசமாகும் என்று தான் நினைக்கிறேன்

சந்தேகம் ஏன்? உங்கள் கற்பனையும் ஓவியமும் நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kavi arunasalam said:

சந்தேகம் ஏன்? உங்கள் கற்பனையும் ஓவியமும் நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.👌

நன்றி @Kavi arunasalam அண்ணை, நான் சொல்ல வந்தது, பொதுவாக மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி. ஒரு ஓவியம், ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லிவிட முடியும் என்பதும், இன்னொரு பரிமாணத்தை வாசகரிடம் ஏற்படுத்த வல்லது என்பதும் உண்மையாயிருந்தாலும், அதைப் படைக்கும் ஓவியர்களுடைய முயற்சியும் மற்றும் ஓவியங்களின் சிறப்பும் எல்லாருக்கும் விளங்குவதில்லை, அல்லது காலம் எடுக்கும். இப்போது ஏஐ வந்தாப்பிறகு, அந்த ஓவியர்களின் சிறப்பு இன்னும் விளங்காமற் போய்விடும் என்ற ஆதங்கத்தைத் தான் சொல்லியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கவிதையும் அதை உணர்த்தும் ஓவியமும் வெகு சிறப்பாக உள்ளது ......... உங்களிடம் பல திறமைகள் உள்ளது ......... அவற்றை வெளிப்படுத்த இது ஒரு நல்ல களம் ......... ! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் @suvy அண்ணை. எல்லாம் வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் என்று ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2025 at 22:20, villavan said:

இப்போது ஏஐ வந்தாப்பிறகு, அந்த ஓவியர்களின் சிறப்பு இன்னும் விளங்காமற் போய்விடும் என்ற ஆதங்கத்தைத் தான் சொல்லியிருந்தேன்.

உண்மைதான் வில்லவன். சமீபத்தில் கூட நடிகரும் ஓவியருமான சிவகுமார், “இந்தியாவில் ஓவியர்களாகப் பிறக்கக் கூடாது. பாவப்பட்ட ஐன்மங்கள்” என்ற கருத்துப்பட பேசியிருந்தார். இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் இலங்கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஓவியர்களுக்கான சிறப்பு எங்களுக்கு (அதாவது எங்கள் நாட்டில் எப்பொழுதும்) விளங்காமற்தான் இருக்கிறது.

பருத்தித்துறையில் தும்பளைக்குப் போகும் பாதையில் சிவபாதம் கடை ஒன்றிருந்தது. படங்களுக்கு பிறேம் போடும் கடை அது. எனது ஓவிய ஆசிரியர் ஏ.மார்க் அவர்கள் படங்களை வரைந்து சிவபாதத்திடம் கொடுப்பார் அவரும் பிறேம் போட்டு  கடையில் பார்வைக்கு வைத்திருப்பார். எப்போதாவது யாராவது திருமணம், குடிபுகுதல் போன்றவற்றுக்கு பரிசாகக் கொடுப்பதற்காக ஐந்து ரூபாக்கள் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். அப்பொழுதே ஒரு இலங்கைத் தமிழ் ஓவியனின் படைப்பை ரசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இப்பொழுது மிக மோசம்.

நான் யேர்மனிக்கு வந்த நாட்களில் ஓவியக் கண்காட்சிகள் அதிகம் நடக்கும். இப்பொழுது அப்படியான கண்காட்சிகள் பற்றிய அறிவித்தல்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.  ஓவியத்துக்கான உப பொருட்கள் வாங்கும் கடைகளே எனது நகரில் இல்லாமல் போயிற்று. எதுவும் வாங்க வேண்டுமானால் இணையத்தில்தான் வாங்க வேண்டியிருக்கிறது.

எங்களது கற்பனைகளுக்கு, தேவைகளுக்கு  ஏற்ப AIஇல் படங்களை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கிறது. எங்களுக்குத் திருப்தி தரும்வரை ஒன்றல்ல ஒரு நூறு படங்களை உருவாக்கச் சொல்லலாம். யாரிடமும் போய் கேட்காது தங்களுக்குத் தேவையான ஓவியங்களை அவரவர்கள் உருவாக்கிக் கொள்வது ஒரு கொடைதான். நீரோடு செல்லும் ஓடம் போல் நாங்களும் காலத்தோடு பயணிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

எனது ஓவிய ஆசிரியர் ஏ.மார்க் அவர்கள்

இலங்கையின் பிக்காசோ என்று கூறக்கூடிய சிறந்த ஓவியர் அவர்.

நீங்கள் சொல்வது போல் உலகம் முழுக்க இப்போது கலைகளில் ஈடுபாடும் நாட்டமும் குறைந்து சென்றாலும், எமது பிரதேசங்களில் அதற்கான இரசனை வெகு குறைவு, தென்பகுதியில் அவர்களின் வாழ்க்கையோடு கலை ஒன்றியிருப்பதைப் பார்த்து பொறாமையாயிருக்கிறது.

கலாரசனை குறையும் போது தரமின்றிய படைப்புகளையே தூக்கிப்பிடித்து அது மேலும் மேலும் அழிவுச்சுழலுக்குள் கலையைத் தள்ளுவதால், இரசனையும் மேலும் மேலும் முடமாகிக் கொண்டே போவது தான் கொடுமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.