Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images-12.jpg?resize=275%2C183&ssl=1

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.

வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

UPDATS:

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி (ஜெட்) விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்லிருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் குருநாகல் -வாரியபொல மினுவங்கேட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1426054

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-293.jpg?resize=750%2C375&ssl

விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் குறித்து சிறப்பு விசாரணை!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க தளத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இலக்கம் 05 போர் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 ரக விமானம் இன்று (21) வாரியபொல பதெனிய பிரதேசத்தில் பயிற்சி அமர்வின் போது விபத்துக்குள்ளானது.

எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் விமானத்தை விட்டுவிட்டு பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக குருநாகல் பாதெனிய மினுவாங்கேட் வித்தியாலய வளாகத்தில் தரையிறக்கினர்.

இந்த விமானத்தில் பிரதம பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானி மற்றும் பயிற்சி பைலட் அதிகாரி ஆகியோர் பயணித்துள்ளதுடன், அந்த அதிகாரிகள் குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 07.27 மணியளவில் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் சரியாக 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1426068

  • கருத்துக்கள உறவுகள்

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் 

Published By: Digital Desk 3

21 Mar, 2025 | 11:31 AM

image

விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்  குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால்  சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல  05  தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான   பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும்  K-8 விமானம், இன்று வெள்ளிக்கிழமை (21) குருநாகல்  வாரியபொல  பகுதியில்   பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. 

விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது  குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில்  புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம்  | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-310.jpg?resize=750%2C375&ssl

விமானப் படை விமான விபத்துக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்!

பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலைக் கேட்டுப் பெற்றதாகக் கூறினார்.

அந்த அறிக்கையின் படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பழையவை அல்ல என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

சாலைகளில் பழைய வாகனங்கள் ஓட அனுமதிக்கப்படுவதால், விமானங்களில் அப்படிச் செய்ய முடியாது.

இந்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் பயிற்சியில் இருந்தனர்.

அவர்களால் ஒரு தவறு நடந்துள்ளது.

பயிற்சியாளர்கள் விபத்தில் இருந்து தப்பியதில் நாங்கள் நிம்மதியடைகிறோம்.

இது பயிற்சியின் போது ஒரு சாதாரண சம்பவம், உலகம் முழுவதும் இவ்வாறான விபத்துக்கள் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் விமானப்படை விமான விபத்துக்குள்ளானதற்கு இதுவே ஒரே காரணம் என்றும், விபத்து குறித்த தொழில்நுட்ப அறிக்கையின் கண்டுபிடிப்பும் இதுதான் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

மார்ச் 21, வெள்ளிக்கிழமை வாரியபொலவில் இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

இரண்டு விமானிகளுடன் சென்ற K-8 பயிற்சி ஜெட் விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து,

பின்னர் வாரியபொலவில் விபத்துக்குள்ளானது.

எனினும், இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி, குருநாகலின் பதேனியாவில் தரையிறங்கினர்.

https://athavannews.com/2025/1426246

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது இலங்கை

Published By: VISHNU 24 MAR, 2025 | 03:04 AM

image

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவிக்கையில்

விமான விபத்து குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  

சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக ஜெட் விமானங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்

வாரியபொல, மேல் மினுவங்கேட்டின் வெலகெதர பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/210028

  • கருத்துக்கள உறவுகள்

கே-8 பயிற்சி விமான விபத்து; விசாரணைகளின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுமா?

28 MAR, 2025 | 09:43 PM

image

பயிற்சி நடவடிக்கையின் போது வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கே-8 பயிற்சி விமானம் மார்ச் 21 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தின் போது பயிற்சி நடவடிக்கையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் விமான விபத்திற்கான உண்மையான காரணிகளை கண்டறிவதற்காக விமானப்படை உத்தியோகப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது.

தனி குழு அமைத்து இந்த விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொண்டு வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார். 

இருப்பினும், விமானியின் தவறினாலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மார்ச் 23 ஆம் திகதி தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ விசாரணைகளை விமானப்படை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதாவது விபத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிவதை திசைத்திருப்பும் வகையில் அமைச்சர் பிமல், அடிப்படையற்ற விதமாக விமானிகளை சாடியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துறைசார்ந்த அறிவின்றி விமானப்படையின் விசாரணை அறிக்கை வெளிவரும் முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எவ்வாறு விமானிகள் மீது குற்றம் சுமத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேபோன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தெளிவுப்படுத்தல் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. விபத்துக்குள்ளான கே-8 விமானத்தின் சீன உற்பத்தியாளர் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு சீன தரப்பை அவதானத்திற்கு உட்படுத்துவதை திசைதிருப்ப இத்தகைய கூற்றுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றது. 

இத்தகைய செயற்பாடுகள் இலங்கை விமானப்படையின் தொழில்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்த கவலைகளை எழுப்புகிறது. ஏனெனில் விபத்து நடந்த தினத்தன்று  இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

இராணுவ விமான விபத்து விசாரணைகளின் போது பொதுவாக இடிபாடுகள் ஆய்வு, விமானத் தரவு மதிப்பீடு மற்றும் விமானிகள் வாக்குமூலம் என்பவை ஊடாக  விரிவான பகுப்பாய்வு  செய்யப்படும். ஆனால் வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளான கே-8 பயிற்சி விமான விபத்து குறித்து இவ்வாறானதொரு விரிவான விசாரணைக்கு முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமானிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் ஹோங்டு விமானப் போக்குவரத்துத் தொழில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கே-8 விமானங்கள், பாக்கிஸ்தான், சிம்பாப்வே மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தொடர்புடைய விபத்துகளை எதிர்க்கொண்டுள்ளன. 

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையிலும் இடம்பெற்ற கே-8 விமானத்தின் விபத்து குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும். ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிற பயிற்சி விமானங்களுடன்  இலங்கை விமானப்படையின் முந்தைய சிக்கல்கள் பல உள்ளன.

இதேவேளை விமானப் பாதுகாப்பு கவலைகளுக்கு அப்பால், இவ்வாறான விபத்துக்கள் குறித்து அரசாங்க அதிகாரிகளின் முன்கூட்டிய அறிவிப்புகள் விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன. 

எனவே விசாரணை குழுக்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எவ்வாறாயினும் எந்தவொரு நாட்டையும் பொறுத்த வரை, தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை விட வேறு எதுவும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

https://www.virakesari.lk/article/210474

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.