Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21 Mar, 2025 | 05:05 PM

image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தைக் கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும் என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ தெரிவித்தார்.

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை, தளபதி பபாரோவின் வருகை அடிக்கோட்டிட்டு காட்டியது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, 

“நமது சவால்களைப் பற்றி நேரடியாகப் பேசுவோம். நாடுகளின் உறுதியான நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை அச்சுறுத்துகிறது, வர்த்தகத்திற்கு அவசியமான வழிசெலுத்தல் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தை கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும்.

பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், கடத்தல், கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த அச்சுறுத்தல்கள் தினமும் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. இன்னும், தொழில்நுட்ப புரட்சி கடல்சார் பாதுகாப்பை மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆகியவை கடலில் செயல்பாடுகளை அடிப்படையில் மாற்றியமைக்கின்றதாக அமையும். இந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்” என தெரிவித்தார்.

“உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது.

மேலும், சர்வதேச பாதுகாப்புக்கு இலங்கை அளித்த சிறந்த பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். அமைதி காக்கும் பணிகள், தொழில்முறையை வெளிப்படுத்துதல், ஒருங்கிணைந்த பணிக்குழு, தலைமைத்துவம், இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்தத் தலைமைத்துவம் இலங்கையை ஒரு அத்தியாவசிய பங்காளியாக மாற்றும் மதிப்புகள் மற்றும் திறன்களைக் காட்டுகிறது.

உங்கள் தலைமைத்துவம் முக்கியமானது, உங்கள் குரல் முக்கியமானது, உங்கள் தொழில்முறைத் திறனும் முக்கியமானது, மேலும் எங்கள் கூட்டாண்மை முழு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும்” என்றார்.

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்வது, தாம் வைத்ததே சட்டம் என்று பயங்கர ஆயுத பலத்தை எழுந்தமானமாக பிரயோகிக்கும் குழப்பங்காசி கூட்டங்கள் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்று.

ஏனெனில்,குழப்பங்காசி கூட்டம் யுத்தத்தை வேண்டி நிற்கிறது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

6 hours ago, பிழம்பு said:

“உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது.

இலங்கை என்ற நாட்டை உருவாக்கி அதை ஜனநாயக நாடு,பல்கலாச்சார நாடு என‌ பிரச்சாரம் செய்து கொண்டு 200 வருடங்களுக்கு மேலாக நீங்கள் கைக்குள் வைத்திருப்பது உலகம் அறிந்த உண்மை...

உங்களை விட மகா பயங்கரவாதிகள் உலகில் இல்லை (இப்படி எழுதினால் பிறகு விசா தரமாட்டாங்கள்)

இதில பயங்கரவாதம்,கடற்கொள்ளை,ஆயுத பெருக்கம் ,கடத்தல் ....போன்றவற்றை கட்டுப்படுத்தபோயினமாம்...

3 hours ago, Kadancha said:

அவர்கள் சொல்வது, தாம் வைத்ததே சட்டம் என்று பயங்கர ஆயுத பலத்தை எழுந்தமானமாக பிரயோகிக்கும் குழப்பங்காசி கூட்டங்கள் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்று.

ஏனெனில்,குழப்பங்காசி கூட்டம் யுத்தத்தை வேண்டி நிற்கிறது என்று.

குழப்பங்காசி கூட்டம் இருக்கும் வரை சிறிலங்கா ஆட்சியாளர்களின் காட்டில் மழை தான் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.