Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 MAR, 2025 | 09:09 PM

image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மோதலில் ஈடுபடுவதை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. பவுன்சர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோஷித ராஜபக்சவுடன் சென்றவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றது சந்தேகநபர்கள் திம்பிரிகசாய, தெகிவள அத்திடியவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/210023

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலில் யோஷித ராஜபக்ஷவுக்கு தொடர்பில்லை!

24 MAR, 2025 | 01:09 PM

image

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். 

இந்த மோதல் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, கொம்பனி வீதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் இரவு நேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/210054

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-350.jpg?resize=750%2C375&ssl

யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்!

கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியின் முன் சனிக்கிழமை (22) இரவு நடந்த கைகலப்பு தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சரணடைந்துள்ளனர்.

தற்போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (25) கொம்பனித் வீதி காவல் நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

யோஷித ராஜபக்ஷவுடன் வந்த சில நபர்களுக்கும் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த கருத்து வேறுபாடு பாதுகாப்பு காவலர் மீதான தாக்குதலாக மாறியது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக அடையாளம் கண்டுள்ளனர்.

காயமடைந்த பாதுகாப்பு காவலர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://athavannews.com/2025/1426503

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.