Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் 6 வாரங்களாக சுங்க பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ; கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 MAR, 2025 | 08:19 PM

image

(செ.சுபதர்ஷனி)

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில்  திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது.

இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது.

அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும். 

ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/210086

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ஏராளன் said:

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

https://www.virakesari.lk/article/210086

1500 இலட்சம் ரூபாய் என்று, நூறு ஆண்டு பழமை வாய்ந்த வீரகேசரி சொல்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.