Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 MAR, 2025 | 05:37 PM

image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முதல் ஆரம்பமாகியுள்ளது. 

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. 

நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்ற திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால், கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3__3___1_.jpg

3__1___1_.jpg

01__2___3_.jpg

https://www.virakesari.lk/article/210655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் - திருச்சி இடையிலான விமான சேவை ஆரம்பம்!

Published By: VISHNU 30 MAR, 2025 | 09:29 PM

image

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG-20250330-WA0096.jpg

இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG-20250330-WA0094.jpg

அதன்படி, திருச்சியிலிருந்து 27 பயணிகளுடன் இன்று மதியம் 02.02 க்கு விமானமொன்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.

IMG-20250330-WA0095.jpg

அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.

IMG-20250330-WA0092.jpg

இந்தநிலையில், எதிர்வரும் தினங்களில் குறித்த விமானமானது திருச்சியிலிருந்து பிற்பகல் 1.25 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.25 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது.

IMG-20250330-WA0093.jpg

பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 3.05 க்கு புறப்படும் விமானம், மாலை 4.05 க்கு திருச்சியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/210669

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-405.jpg?resize=750%2C375&ssl

திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ். வந்த முதல் இண்டிகோ விமானம்!

இந்தியாவின் திருச்சிராப்பள்ளியிலிருந்து முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) படி, வருகை தந்த விமானத்துக்கு நீர் வணக்கம் செலுத்தி வரவேற்க்கப்பட்டது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதன் பாதை வரைபடத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும், இண்டிகோ திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமானங்களை தொடங்கியுள்ளது என்றும் AASL மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1426910

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.