Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-21.jpg?resize=750%2C375&ssl=

இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!

அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அங்கு அவரைப் போல தோற்றமளித்த ஒரு பெண்ணையும் மற்றொரு ஆணையும் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

இதேவேளை, கம்பஹா – உக்கல்பொட பகுதியில், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1427104

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியை தேடிச்சென்ற சி.ஐ.டியினரிடம் போதைப்பொருளுடன் மாட்டிக்கொண்ட முன்னாள் இராணுவ மேஜர்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை கைது செய்யும் நோக்கில் நடத்திய சோதனையில், அவரைப் போலவே தோற்றமளிக்கும் பெண் மற்றும் முன்னாள் இராணுவ மேஜர் ஆகியோர் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் குருநாகல், உடவல வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் இராணுவ மேஜர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நுவான் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனையில் உதவுவதற்காக பொலிஸ் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் மேஜரும் செவ்வந்தி பெயரை கொண்ட பெண்ணும் தகாத உறவைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

முன்னாள் மேஜர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அனுராதபுரத்தில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படவுள்ளனர்.

https://thinakkural.lk/article/316731

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த யுவதி கைது

02 APR, 2025 | 11:14 AM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த ஹோட்டலுக்கு சென்று சோதனையிட்ட போது இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அண்மையில் அறிவித்திருந்தனர். 

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071-8591727 அல்லது 071-8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்க தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தியின் விபரங்கள் :

பெயர்  - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி 

வயது - 25 

தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v

முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம

https://www.virakesari.lk/article/210898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

செவ்வந்தியை தேடிச்சென்ற சி.ஐ.டியினரிடம் போதைப்பொருளுடன் மாட்டிக்கொண்ட முன்னாள் இராணுவ மேஜர்

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை கைது செய்யும் நோக்கில் நடத்திய சோதனையில், அவரைப் போலவே தோற்றமளிக்கும் பெண் மற்றும் முன்னாள் இராணுவ மேஜர் ஆகியோர் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளை...ஏன் ஒழிக்க முடியாமல் இருக்கின்றது என்பதற்கு விடை கிடைத்து விட்டது. படையினரே... போதைப் பொருள் கடத்தல், வியாபாரம் செய்யும் போது எப்படி ஒழிப்பது. பாவம் இளைய சமுதாயம்.

போகின்ற போக்கில்... தென் அமெரிக்க நாடுகள் போல்... போதை மாஃபியாக்கள் இலங்கையிலும் உருவாகுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

போதைப் பொருளை...ஏன் ஒழிக்க முடியாமல் இருக்கின்றது என்பதற்கு விடை கிடைத்து விட்டது. படையினரே... போதைப் பொருள் கடத்தல், வியாபாரம் செய்யும் போது எப்படி ஒழிப்பது. பாவம் இளைய சமுதாயம்.

போகின்ற போக்கில்... தென் அமெரிக்க நாடுகள் போல்... போதை மாஃபியாக்கள் இலங்கையிலும் உருவாகுவார்கள்.

தமிழர்களை அழிக்வென்று இறக்கப்பட்ட போதைகள் இன்று பெரும் வியாபாரமாகி தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கிறது.

படையினரே இதன் காரணகர்த்தாக்கள் என்று சொன்னபோது சாட்சியங்கள் இல்லாமல் எப்படி இப்படி சொல்லலாம் என்று சிலர் குறை கூறினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

படையினரே இதன் காரணகர்த்தாக்கள் என்று சொன்னபோது சாட்சியங்கள் இல்லாமல் எப்படி இப்படி சொல்லலாம் என்று சிலர் குறை கூறினார்கள்.

படையினரை குறை சொன்னால்...இங்கு சிலருக்கு பிடிப்பதில்லை.

என்ன, கள்ளத் தொடர்போ... யாரறிவர். 😂

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் பொன்னம்பலம் சொன்னது போல் போதை பொருள் விற்பவர்களை காவல்துறை பிடிக்க செல்லும் போது அவர்கள் இராணுவமுகாமுக்குள் ஓடி ஒழிகிறார்கள் என்று கூறி இருந்தார்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-320.jpg?resize=750%2C375&ssl

இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் சுட்டிக்காட்டப்படவில்லை என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு பெப்ரவரியில் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தை கொண்டு சென்று துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படும் குற்றவாளி ஆவார்.

https://athavannews.com/2025/1436843

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.