Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

488406323_664403399332209_62162499893352

488660083_664403455998870_13846220477739

488934236_664403409332208_13720169142003

நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.

அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும்.

ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள்.

பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தியர் தம்பி நீ சாக மாட்டாடா கத்தாத என்றார்.

இல்லை நான் செத்திடுவன் எனக்கு தேசிக்கா தண்ணி கொடுங்க என மீண்டும் மீண்டும் கத்தினேன்.

முதல் 3 நாட்கள் உணவும் தண்ணியும் இல்லை கடும் தாகம் எனக்கு தேசிக்காய் தண்ணி குடிக்கனும் என்று கத்தினன்.

வைத்தியர் சொன்னார் தம்பி உடல் முழுவதும் காயம் நீ தண்ணீர் கூட குடிக்க கூடாது என்றார்.

வேதனை தாங்க முடியாது கடும் கெட்ட வார்த்தையால் வைத்தியரை திட்டினேன் வைத்தியரின் மாமா அங்கு இருந்தார் வைத்தியரின் மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.

அப்போது அவரின் மாமா தம்பி நீ தண்ணி குடிச்சா செத்திடுவா என்றார்

நான் செத்தாலும் பரவாயில்லை தண்ணீர் தாருங்கள் என்று கதறினேன் பின் ஏதோ ஒரு துளி ஆ என்று சொல்லி அடி தொண்டைக்குள் விட்டார்கள்.

ஆனால் என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு தூசனம் பேசியும் யாரும் என்னை கண்டிக்கவில்லை.

சேலேன் ஏற்றப்பட்டது கொஞ்சம் அமைதியாக இருந்தேன் நன்றாக இருட்டி விட்டது

சேலேனை கடித்து மட மட என குடித்துவிட்டேன் சிறிது நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்தவர் இறந்து விட்டார் என தூக்கி சென்றார்கள்.

பின் வைத்தியர் என்னை வந்து செக் பன்னினார் இவ்வளவு வேகமாக சேலேன் முடிந்துவிட்டதை பார்த்தவுடன் சேலேன் குழாயை செக் பன்னினார் நான் அதை கடித்து குடித்தது அவருக்கு தெரிந்து விட்டது.

இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டது ஆனால் அவர்கள் என்னை அடிக்கவில்லை,

பின் மயக்கம் தெளிந்து பார்த்தவுடன் வைத்தியசாலையாக இயங்கி கொண்டு இருந்த ஒரு பாடசாலை காயப்பட்டவர்களுடன் படுத்திருந்தேன், பக்கத்தில் ஒருவன் பெரிய சத்தமாக கதிறி அழுதுகொண்டு இருந்தான் அண்ணேக்கு கையில காயம் எல்லாமே போய்ற்று எனி எதுவும் செய்ய முடியாது என இடை விடாமல் கத்தினார்.

எனக்கு எதுவும் புரியவில்லை பிறகு ஆறுதலாக கேட்டேன் அதன் பிறகு ஆனந்தபுரத்தில் நடந்தது பற்றி தெளிவாக கூறி கூறி அழுதார், அவர் ஓர் பொருப்பாளராக இருந்திருப்பார் ஆனால் அழுகையை நிறுத்தவில்லை.

உண்மையிலேயே நான் போராட்டத்திற்கு புதுசு ஆனந்த புரத்தில் சிக்குண்டு கிடந்த நேரம் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, எங்களுக்கு அது பற்றி விளக்கமும் இல்லை, என் போன்ற பலர் அங்கு இருந்தார்கள் கோபித் அண்ணா வீரச்சாவு அடையும் வரை நாங்கள் அமைதியாகதான் இருந்தோம்.

வைத்தியசாலையில் என்னால் எழுந்து நிற்க முடியாது உடல் முழுவதும் 8 இடங்களில் காயம்

கட்டிலில் கிடக்கும் க,எனக்கு ஒட்டு துனியும் இருக்காது அந்தரங்கம் ஒரு துண்டு துனியால் மூடப்பட்டு இருக்கும் சலம் மலம் எல்லாம் அப்படியே போகும்.

ஒரு ஐயாவும் ஒரு சின்ன தம்பியும் என்னை சுத்தம் செய்வார்கள்.

இப்படி சில நாள் சென்றவுடன் தம்பி எனி நீ நடக்க பழக வேண்டும் என்றார்கள்.

நானும் கட்டிலில் இருந்து எழுந்து கீழ் கால் வைக்கும்போது விழுந்து விட்டேன் அப்படி பலமுறை நடந்தது.

எனியும் நடக்காமல் இருந்தால் சரி வராது என்று தடியை ஊண்டிக்கொண்டு டொய்லெட் போய் அங்கு விழுந்து எழும்ப முடியாமல் பல மணிநேரம் அதற்குள்ளே கிடந்தது என்னும் கண்களுக்குள் நிற்கிறது.

இந்த படத்தில் கிடப்பது நானா என்பது எனக்கு தெரியாது ஆனால் கையில் சிவப்பு நூல் வெடிபட்ட இடம் அந்த வைத்தியர் அவர் பக்கத்தில் ஒரு ஐயா இது எல்லாம் என் கண்களுக்குள் வந்து போகிறது.

தாயக விடுதலை போராட்டத்தில் எப்போதுமே நடக்காத பாரிய இழப்பு ஆனந்த புரத்தில் நடந்தேறியது.

தேசிய தலைவர் கூறிய போன்று பலமுறை நூல் இழையில் உயிர் தப்பியது காலம் என்னும் ஏதோ ஒரு விடையத்தை செய்து முடிப்பதற்காக என்னை தயார் படுத்துகிறது என உணர்கிறேன் ...

இது நான் இல்லை 2009 முன் வாழ்ந்த போராளி கார்மேகனின் நினைவுகளில் இருந்து...

Malaravan Uthayaseelan

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488647918_122249399858030124_84242923284

இதுவே எனது இறுதி இருப்பிடம் இதிலிருந்து என்னால் ஒரு அடிகூட இனி நகரமுடியாது.

தலைவர் உறுதியாக கூறிவிட்டார்.

பெரும் ஊடறுப்பு தாக்குதலுக்கு தயாராக இருந்த அனைத்து அணிகளும் தயார்நிலையில் விடப்பட்டுவிட்டன.

தலைவரின் இருப்பிடத்தை அண்மித்தே அனைத்து தளபதிகளது கட்டளை நிலையங்களும் போடப்பட்டிருந்தது.

உள்ளே நகர்ந்த அணியின் இறுதிவேவுத் தகவலுக்காக காத்திருந்தவேளை அது.

தீடீரென எதிர்பாராத விதமாக இராணுவம் முன்னேற்றத்தை மேற்கொண்டது.எங்கோ தகவல் கசிவு ஏற்பட்டதை விளங்கிக்கொண்டோம்.

இராணுவத்தின் முன்னேற்றம் எடுத்த எடுப்பிலே தலைவரின் இருப்பிடத்திற்கு நேரே தொடங்கப்பட்டதுதான் தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்திருந்தது.

தலைவர் இருந்த இடத்தைக் கடந்து இராணுவம் ஊடறுத்துவிட்டது.

நச்சுக்குண்டுகளின் தாக்கத்தாலும் எறிகணைகளின் சிதறல்களாலும் காயத்திற்குள்ளான போராளிகள் சமராட முடியாது மயங்கி விழுந்தனர்.

எங்களுக்கு உடம்பெல்லாம் எரிகாயமாக இருக்கிறது மூச்சுவிட மூக்கெல்லாம் எரியிது கண்ணால் பார்க்க முடியாதிருக்கிறது.உடனடியாக உதவிக்கு வாங்கோ.

தலைவரின் பாதுகாப்பு அணியின் வோக்கி......கட்டளையிட்டு அடங்கியது.

ராங்கோ வண்....ராங்கோ வண்.

லீமா சேரா......!

பலமுறை அழைத்தும் தொடர்பில்லை.

ரூ எய்ற்.....ரூ எய்ற்.....

பப்பா நவம்பர்....!

கடாபி அண்ணை எடுத்தார்.

நான் கிட்ட போய்ட்டேன்.ஆனால் அடி பின்னுக்கு இருந்தும் வருகிது.box பண்ணிற்றான் என நினைக்கிறேன்.

அந்தப்பக்கம் மணியின்ர பெடியள்தான் வெளியால உடைக்கிறதைவிட உள்ளால உடைக்கிறதுதான் சரி.இன்னும் ஆள் உள்ளுக்கதான்......!

ராங்கோவின் கட்டளை இறுக்கமாக கிடைத்தது.

தலைவரைச்சுற்றி இராணுவம் போட்ட முற்றுகை box ற்குள் ஒரு சிறிய பாதுகாப்பு box எமது அணிகளால் போடப்பட்டது.இப்பொழுது அந்த box க்குள் இருந்து,நகரும் box ஆக களமுனை மாறியது.

சாரங்களை கிழித்து முகங்களில் இறுக்கமாக கட்டியபடி ஒவ்வொருவரது சண்டை அணிகளும் தலைவரின் இருப்பிடத்தை நோக்கிப் பாய்ந்தது.

வெளியில் இருந்து மூன்று பக்கங்களால் எமது box ஐ நோக்கி எமது ஏனைய அணிகள் நகர்ந்து இராணுவத் தடுப்பை உடைத்து உள்நுழைந்து பாதுகாப்பாக தலைவரை மீட்டெடுத்தது.

ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற தலைவர் மறுத்தபோதும் அவரது கட்டளையை அந்தச்சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ளாது ஒருவாறு தட்டுத்தடுமாறி பலருடைய வேண்டுதல்களின் பின்னர் முழு விருப்பின்றி தலைவர் சம்மதிக்க ஆனந்தபுரத்திலிருந்து தலைவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தன அணிகள்.

தொடர்ந்துவந்த நாட்கள்.....உள்ளே அகப்பட்ட இராசயனக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான போராளிகளை மீட்பதற்கான களமாகவே விரிந்தது.இப்போது இராணுவத்தின் தாக்குதல் அடங்கிவிட்டது கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்களைக் கடந்து சண்டையணிகள் பழைய நிலைகளுக்குச் சென்று விட்டது.நூற்றுக்கணக்கான

இராணுவத்தின் உடலங்கள் சிதறிக்கிடந்தது.பின்வாங்கிய இராணுவம் சிறிது நேரத்தில் பலமான விமானக்குண்டுவீச்சுகளை மேற்கொண்டது.மீண்டும் போராளிகள் இராசயனக்குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.இருபது தடவைக்கு மேலாக தொடர் விமானக் குண்டுத்தாக்குதல்களையும் அதேவேளை தொடர் எறிகணைத்தாக்குதலையும் சரமாரியாக மேற்கொண்ட சிங்களப்படை இராசயன முகக்கவசங்களுடன் முன்னேறியது.

மயக்கத்துடனும்கூட போராளிகள் துப்பாக்கிகளைக் கைவிடாது சமராடினர்.

எதிரியிடம் எமது ஆட்லறிகள் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காக அதனை குண்டுவைத்து அழிப்பதில்கூட தம்மை வெடிமருந்தோடு அழித்தனர் சில போராளிகள்.ஊடறப்புக்களில் ஈடுபட்டபடி மயங்கிவிழுந்துகொண்டிருந்தனர்.

எல்லோருடைய வோக்கிகளும் கட்டளைகளைக் கொடுத்தபடியே ஆனாலும் வெளியிலிருந்து உதவிக்கு அணிகள் அவசர அவசரமாக அப்பொழுதுதான் அனுப்பப்பட்டுகொண்டிருந்தது.

களச்சண்டைகள் கைகலப்புச் சண்டையாக மாறிப்போக போராளிகள் இராணுவத்தோடு நேரடியாகவே மோதும் நிலை உருவானது.

வெளியிலிருந்து அணிகள் சென்று உள்நுழைந்து சண்டையை தீவிரப்படுத்தியபோதும்.இராசயனத் தாக்குதலுக்கு உள்ளான அணிகள் அனைத்துமே செயலிழந்துபோய்விட்டன.

இன்னொரு பக்க முன்னரங்கை பலவீனப்படுத்தி அடுத்த பக்கத்தை பலப்படுத்துவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை.

04/04/2009 விடியாத நாளாக இருளாகிப்போனது.

கவிப்புயல் சரண்

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கமுடியவில்லை...இது எமது விதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.