Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் உறுதி: ரணிலுக்கும்இ பிரபாகரனுக்கும் அறிவிக்க விரும்புகிறேன் - ஜனாதிபதி

Featured Replies

பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவிரித்துள்ளார்.

இதுகுறித்து கிழக்கு மாகாணத்தையும் வடமத்திய மாகாணத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது உறுதி என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் நான் தெரியப்படுத்த விரும்புவதாகவும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுடன் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப்படாத நிலையிலேயே நாங்கள் தாக்குதல்களை நடத்தினோம். விடுதலைப் புலிகள் பேச்சுக்களைக் சீர்குலைத்தனர்.

தாக்குதல் மூலம் சிலாபத்துறையை மீட்டோம். வன்னி நோக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அநுராதபுர வான்படைத்தளதிற்கு புலிகளால் தேசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிலர் பயன்படுத்துகிறார்கள். புலிகள் தாக்குதல் நடத்தினால் அரசாங்கம் கவிழும் என சிலர் நினைக்கின்றார்கள் மகிழ்சியாக இருக்கின்றார்கள்.

சில ஊடகங்கள் பொறுப்பற்று நடந்துகொள்கின்றன. புலிகள் திஸ்ஸமாகாரமவில் நடத்திய தாக்குதலில் இறந்த படையினர் எண்ணிக்கை 7,8,10 என்று 20 வரைக்கும் வானொலி ஒன்று செய்தியைச் ஒலிபரப்புச் செய்திருந்தது.

இவர்கள் நாட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஊடகங்களில் உள்ள உறவினர்கள் சிலர் அரசியல் செயற்திட்டத்திற்காக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பேச்சின் இறுதியில் அரசியலை மறந்து நாட்டை நினையுங்கள் என்றார் மகிந்த ராஜபக்ச.

யப்பானின் உதவியோடு மன்னம்பிட்டியப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்ட பாலம் இலங்கையில் மிகப் பெரிய பாலம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பதிவு

அப்படி என்றால் கோவணம் உருவி தலையில கட்டுவேன் என விடாப்பிடியாக நிற்கிறார் நிற்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடபாவி இப்படி சொல்லிபோட்டு அப்பாவி தமிழ் மக்கள் மீது ஏவுகணை ஏவப்போறான் போல இருக்கு :D

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவம், சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா நாட்டு பொதுமக்கள்தான் காரணம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னம்பிட்டிய பாலம் திறப்பு விழா நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. நாம் அதனைச் செய்வோம். எவராலும் அதனைத் தடுத்துவிட முடியாது. இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

சில புலிகளாலேயே அனுராதபுரம் வான் தளத்துக்கு சேதம் ஏற்படுத்த முடிகிறது.

இராணுவம் மற்றும் காவல்துறையினர் இதுவிடயத்தில் போதுமான எச்சரிக்கையாக இருக்கவில்லை.

அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை. பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

சிலர் இதனை விரும்பவில்லை. அவர்கள் (புலிகள்) வந்து தாக்குதல் நடத்தினால் இந்த அரசாங்கம் கவிழும் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறானது.

பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

அரசியலை மறந்துவிடுங்கள். நாட்டை நினையுங்கள். தாக்குதல் நடந்த நாளில் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். சிலர் மகிழ்ச்சியாகப் பேசினர். சிலர் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை நாம் மேற்கொள்ள மாட்டோம்.

நாங்கள் சிலாவத்துறையை விடுவித்தோம். வன்னியில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நாம் தாக்குதல் நடத்தினால் அவர்களும் தாக்குதல் நடத்துவார்கள். நீண்டகால பொறுமைக்குப் பின்னர்தான் நாம் தாக்குதல் நடத்தச் சென்றோம். பேச்சுக்களின் மூலம் தீர்வு காணப்படாத நிலையில்தான் தாக்குதல் நடத்தினோம். அவர்கள் அனைத்துப் பேச்சுக்களையும் சீர்குலைத்தனர்.

திஸ்ஸமாகாரமவில் புலிகள் தாக்கியமை குறித்து வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்புகையில் இறந்த படையினர் எண்ணிக்கை 7,8,10 என்று 20 வரைக்கும் கூறினார்கள். சில நேரங்களில் ஊடகங்கள் பொறுப்புணர்வின்றி செயற்படுகின்றனர். அவர்கள் இந்த நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சிலர் தங்களது அரசியல் செயற்திட்டங்களுக்காக ஊடகங்களில் உள்ள உறவினர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாங்கள் இன்னமும் பொறுமையாக இருக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் பிரச்சினை இல்லை. நாங்கள் அச்சப்படவில்லை. நாங்கள் பீதியடையவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் பொறுமை உண்டு. அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்வதை நாம் ஊக்கப்படுத்த முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது. மக்களிடம் தவறான தகவல்களை கூறுவோர் முன்ன சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு சிலர் ஊடக சுதந்திரம் இல்லை என்கின்றனர். ஆனால் என்ன நடக்கிறது? அரசாங்க விவகாரங்கள் தொடர்பில் இப்படியான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க முடியாது. தயவு செய்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இந்தத் தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள் என்றார் மகிந்த ராஜபக்ச.

http://puthinam.com/full.php?2e46WH9cb3bh5...dD3gq2cc0sg6V2e

apura1.jpg

இது ஒரு பயங்கரவாதியின் அறிவிப்பு

என்னே ஒரு அருமையான தலைவர். வெற்றியென்றால் தான் கேக் வெட்டுவார். தோல்வியை மற்றவர்களின் தலையில் விட்டுவிடுவார். நாட்டுக்கு த் தேவையான முட்டாள் தலைமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஒரு சிங்கள இணையத்தில் 21 கரும்புலிகளால் இவ்வளவு இழப்பேன்றால். பிரபாகரன் உத்தரவுக்காக காத்திருக்கும் 10000 கரும்புலிகள் களத்தில் இறங்கினால் நாட்டு நிலைமை என்னவாகும் இது தெரியாமல் மகிந்த சகோதரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கருத்துப்பட அவர்களின் உரையாடல் இருந்தது.

இன்று ஒரு சிங்கள இணையத்தில் 21 கரும்புலிகளால் இவ்வளவு இழப்பேன்றால். பிரபாகரன் உத்தரவுக்காக காத்திருக்கும் 10000 கரும்புலிகள் களத்தில் இறங்கினால் நாட்டு நிலைமை என்னவாகும் இது தெரியாமல் மகிந்த சகோதரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கருத்துப்பட அவர்களின் உரையாடல் இருந்தது.

அது வெறும் உரையாடல் மட்டுமல்ல உண்மைநிலை.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.