Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 APR, 2025 | 04:02 PM

image

“புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட” - சார்ல்ஸ் வில்லியம் எலியட் (Charles William Eliot)

இன்று, சர்வதேச புத்தக தினம் ஆகும். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், சர்வதேச புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது.

வாசிப்பு ஒன்றே மனிதனை பூரணப்படுத்தும். நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். ஆக…. மனிதன் பலதரப்பட்ட புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், தன் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுவது நல்ல புத்தகங்களே என்றால் அது மிகையல்ல. 

இப்படி, மனிதனின் வாழ்வை ஒழுங்குபடுத்தக்கூடிய புத்தகங்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே சர்வதேச புத்தக தினம் ஆகும். அந்த வகையில், சர்வதேச புத்தக தினத்தின் ஆரம்பம் 1995ஆம் ஆண்டு ஆகும். புத்தகங்கள் பற்றி எடுத்துரைக்கும் பொருட்டு, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் அந்த ஆண்டு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு, உலகளவில் உள்ள எழுத்தாளர்களைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது.

world-book-day-2025.webp

இந்த நாள் உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே.லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மெனுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது.

இந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலகை விட்டு சென்றாலும், அவர்கள் இலக்கியத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்பு தலைமுறை தலைமுறையாக புத்தக வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறது.

புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும்.

நாம், புதிய சொற்களை கற்கும் போது, அறிவு மேம்பட்டு மொழி பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இதனால் எழுத்துத் திறனும் மேம்படும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும், மன அமைதியைப் பெறவும் கூட, புத்தக வாசிப்பே சிறந்த வழியாகும்.

love-to-read-books-benefits-of-reading.j

எப்போது பார்த்தாலும், கணினியிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடப்பவர்களும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை, நல்ல புத்தகங்களை வாசிக்க ஒதுக்கினால், மனம் அமைதியாகி, புத்துணர்வு ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். 

ஆகவே, புத்தகம் மனித குலத்தின் அறிவுச் சொத்து. அதனை உணர்ந்து வாசிப்புத் திறனை மேம்படுத்துவோம். வாழ்க்கையை, சிறப்புடனும், பயனுள்ள வகையிலும் கழிக்க, சுவாசிக்கும் வரை வாசிப்போம்.

bookclub-shelves-letters-read.jpg

https://www.virakesari.lk/article/212732

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.