Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-1-2.jpg?resize=600%2C300&ssl

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது.

அத்துடன் இருநாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இந்நிலையில் , இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1430010

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு ஓடியோடி பேச்சுவார்த்தை நடத்துவதே வேலையாகிப்போய்விட்டது. சமாதான விரும்பி.

  • கருத்துக்கள உறவுகள்

சிவபூசைக்குள் ………😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அமெரிக்காவுக்கு ஓடியோடி பேச்சுவார்த்தை நடத்துவதே வேலையாகிப்போய்விட்டது. சமாதான விரும்பி.

4 hours ago, nunavilan said:

சிவபூசைக்குள் ………😁

animiertes-armee-smilies-bild-0010.gif

அமெரிக்கா.... இவர்களுக்கு இடையில் புகுந்து பேச்சு வார்த்தை நடத்தினால்...

நிச்சயம் இரண்டு பேரும் சண்டை பிடிப்பாங்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

animiertes-armee-smilies-bild-0010.gif

அமெரிக்கா.... இவர்களுக்கு இடையில் புகுந்து பேச்சு வார்த்தை நடத்தினால்...

நிச்சயம் இரண்டு பேரும் சண்டை பிடிப்பாங்கள். 😂 🤣

தன்னுடைய ஆயுதங்களை விற்பதற்கு வழி பண்ணுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தன்னுடைய ஆயுதங்களை விற்பதற்கு வழி பண்ணுவார்.

சிரிப்பு என்னவென்றால்.... இந்தியா, பாகிஸ்தான் இருவருக்குமே ஆயுதத்தை விற்றுக் கொண்டு, சமாதான பேச்சு வார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபடும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் எமக்குச் செய்த அநியாயத்துக்கு... இவங்கள் சண்டை பிடித்தே அழிய வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.