Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன்

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன்

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விநயமாக கோருவதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி தேர்தலில் 58 சபைகளில் தேர்தலில் போட்டியிட்டோம. ஆகக் குறைந்தது 35 சபைகளில் நாம் தனிப்பெரும் கட்சியாக உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆறு சபைகளில் அறுதிப் பெரும்பாண்மையோடு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த சபைகளில் தவிசாளர், உபதவிசாளரை தெரிவு செய்யும் பொறுப்பு கட்சிக்கு மட்டுமே இருக்கும். கட்சி சார்ந்து பொதுச் செயலாளர் அந்தப் பெயர்களை அனுப்பி வைப்பார். எமக்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. நாம் பொறுப்பெடுக்கும் சபைகளை திறமையுடனும் நேர்மையுடனும் நிர்வகிப்போம். 

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக் கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த வகையில் இந்த 35 சபைகளுக்குமான தவிசாளர், உபதவிசாளர்களை நாங்கள் முன்னிறுத்துவோம். 

மற்றைய கட்சிகள் இந்த பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி நாம் முன்னிறுத்துகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று தன்மையாக கேட்டுக்கொள்கிறோம். சில சபைகளில் விதிவிலக்கு ஏதும் இருந்தால் அது தொடர்பில் ஆராய்வோம். பொதுவான வகையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். யாழ் மாநகரசபைக்கும் இது பொருந்தும். 

விசேடமாக நாங்கள் கேட்டுக்கொள்வது தமிழ்கட்சிகளையே. அந்த கட்சிகள் இந்த உடன்பாட்டிற்கு வருவது நல்லது என்பது எமது விநயமான வேண்டுகோள். முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளோடும் நாம் இணங்கியே செயற்படுவோம். 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை இந்த தேர்தலில் நாம் விமர்சித்ததாக எனக்கு நினைவில்லை. அவர்களும் எங்களை விமர்சித்ததாக ஞாபகமில்லை. சில கட்சிகள் எங்கள் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கும் போது அதற்கான பதில்களையே வழங்கியிருந்தோம். 

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கூட்டு தொடர்வது நல்லது என்பது எமது சிந்தனை. காலப்போக்கில் அதனை தீர்மானிப்போம். எனவே இந்த முயற்சி அப்படியான ஒரு போக்கிற்கும் வழிவகுக்கலாம். 

வவுனியாவில் எமது கட்சி பின்னடைந்துள்ளது என்று கூறுவது ஒரு மாயை. கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட இந்த தேர்தலில் வவுனியாவில் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது. அது பின்னடைவு அல்ல. திடீர் என்று வானைத்தொட முடியாது. நாங்கள் சீலிங்கை தொட்டுவிட்டோம் இனி மேலே போவோம் என்றார்.

-வவுனியா தீபன்-

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆத...
No image preview

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்...

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விந...
  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரஹாம் சுமந்திரனுக்கு.... சேர்ந்து இருக்கின்றவர்களை அரவணைத்து போகத் தெரியாது, கட்சியில் இருப்பவர்களை விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது, தன்னுடன் நாலு அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடுவது, தமிழரசு கட்சி மேல் மூன்று வழக்குகளை போட்டு... நீதிமன்றில் நிறுத்துவது போன்ற கேவலம் கெட்ட வேலைகளை செய்து விட்டு... வெட்கம், ரோசம், மானம் கெட்டு... மற்ற தமிழ்க் கட்சிகளிடம் அதுகும் விநயமாக ஆதரவு கோருகிறாராம்.

காரியம் ஆகும் மட்டும் காலை பிடித்து கெஞ்சுவது, அது கை கூடியபின்... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது. இப்படி சுத்துமாத்துகள் செய்த படியால்தானே போன தேர்தலில், மக்கள் வேண்டாம் என்று அடித்து திரத்தியவர்கள். பிறகு என்ன முகத்துடன்... மக்கள் முன்னால் வந்து நிற்கிறார்.

சுத்துமாத்து சுமந்திரனின் செயல் முழுக்க... பச்சோந்தி தனமானது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். இனி என்ன வேஷம் போட்டாலும் மக்களிடம் எடுபடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா?

தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நி...
No image preview

தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா? | தமிழரசு...

தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா? #TruthAboutSumanthiran #SampurRelease #JusticeForNorthEast #TamilStruggle #LegalTruths #WhoSpeaksForUs...
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எமது விநயமான வேண்டுகோள்.

இப்போ விநயமான வேண்டுகோள் வைப்பார், தன் காரியம் முடிந்தவுடன் அதிரடியாக விசராட்டம் ஆடுவார். எப்படியும் சிறிதரனை துரத்தவே பார்ப்பார். சுமந்திரனோடு கூட்டுச்சேர்கிறவர்கள் மூட்டைப்பூச்சியோடு உறங்குவதற்கு சரி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.