Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்; ஆளுநர் வேதநாயகன்

19 MAY, 2025 | 01:34 PM

image

(எம்.நியூட்டன்)

நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்  என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.

மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம்  சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில்  சனிக்கிழமை (17)  இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாதகல் மண்ணுக்கு நான் பிரதேச செயலராக, மாவட்டச் செயலராக இருக்கும்போது வந்திருக்கின்றேன். இப்போது ஆளுநராகிய பின்னர் இரண்டாவது தடவையாகவும் வருகின்றேன். 

ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு பிரதேச செயலராக இங்கு கடமையாற்றிய நினைவுகளே வருகின்றன. அந்தப் பயங்கரமான காலத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் இங்கு வந்து சென்றிருக்கின்றேன். 

இங்கு  சிற்றம்பலம் ஐயாவைப்பற்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். அவரின் வெளிப்படைத்தன்மை பற்றி சிலாகித்திருந்தனர்.

ஒரு சதத்துக்கும் கணக்குக்காட்டக் கூடிய ஒருவர். இன்று இவ்வாறான வெளிப்படைத்தன்மையானவர்களைக் காண்பது அரிது.

ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம். வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள். 

சிற்றம்பலம் ஐயாவிடம் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் இருக்கின்றது. அவர் யாரிடமும் சத்தமாகப் பேசமாட்டார். மக்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளும் ஒருவர்.

அதனால்தான் இன்று ஊரே அவருக்கான கௌரவிப்பு விழாவுக்கு திரண்டு வந்திருக்கின்றது.  இன்று ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குகின்றது என்றால் உடனே அங்கே புல்லுருவிகளும் வந்துவிடுவார்கள்.

அவர்கள் அந்த நிறுவனத்திலிருந்து எப்படி உழைக்கலாம் என்றே சிந்திப்பார்கள்.  இதனால் நாளடைவில் அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆனால் உங்கள் சிற்றம்பலம் ஐயாவால் ஊரிலுள்ள பல நிறுவனங்களும் இன்றும் சிறப்பாக இயங்குகின்றன. 

அவர் தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது. அவர் தொடர்ந்தும் ஊருக்கு சேவையாற்றவேண்டும் என்றார் . 

இந்த நிகழ்வில் 'கந்தன் அலங்காரம்' மற்றும் 'மாதகலின் விடிவெள்ளி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. 

IMG-20250519-WA0024.jpg

IMG-20250519-WA0025.jpg

IMG-20250519-WA0028.jpg

IMG-20250519-WA0029__1_.jpg

https://www.virakesari.lk/article/215134

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.