Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

25 MAY, 2025 | 10:08 AM

image

(நா.தனுஜா)

காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமைகோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நோக்கிலான கூட்டமொன்று இன்றைய தினம் காலை 9மணிக்கு வெற்றிலைக்கேணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு காணி உரிமைகோரல் தொடர்பில் அவசியமான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்புவிடுத்துள்ளார்.

அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பூர்வீக காணிகளை சட்ட ரீதியாகப் பாதுகாப்பதற்குத் தம்மிடம் இலவச சட்ட ஆலோசனை பெறுமாறும், இந்த இலவச சட்ட ஆலோசனையை வழங்குவதற்காக தன்னார்வ அடிப்படையில் சட்டத்தரணிகள் பலர் முன்வந்திருப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி உரிமையாளர்களின் உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணத்தயாரிப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்திருந்த அவர், அதற்குரிய விபரங்களை உள்ளடக்கி நிரப்பவேண்டிய இணைப்பையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் 9 மணிக்கு வெற்றிலைக்கேணியில் உள்ள ரம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இலவச சட்ட ஆலோசனை வழங்கல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள சுமந்திரன், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்வாங்கப்பட்டிருக்கும் காணியின் உரிமையாளர்கள் அக்காணிக்கான உரித்தைக் கோருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து சட்ட ஆலோசனை வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே சட்ட ஆலோசனை பெற விரும்புபவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

அதேவேளை இவ்வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இவ்வர்த்தமானி அறிவித்தலை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்குவதற்கு இம்மாதம் 28 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியிருக்கும் பின்னணியில், அதற்கு முன்பதாக அதனை நீக்காவிடின் மாபெரும் மக்கள் போராட்டத்துக்குத் தயாராகிவருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215612

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு; உரிமையாளர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

26 MAY, 2025 | 11:06 AM

image

வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவிகரிப்பதற்கு அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது.

அரசாங்கத்தினால் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28. 03 .2025யில் 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டு இருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கிலே மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை, மூன்று மாத காலத்துககுள் எவரும் உரிமை கோரதவிடத்து அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததுடன் அதனை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வெற்றிலைக் கேணியில் உள்ள பொது மண்டத்தில் கடந்த மாதமும் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

அதன் போது பத்துக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (25) வெற்றிலைக் கேணியில் உள்ள றம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் சட்ட உதவி வழங்கும் கூட்டம் இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட உதவி வழங்கியதுடன் யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

மேலும் பெருமளவான காணி உரிமையாளர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இவ் இலவச சட்ட உதவி வழங்கும் கூட்டமானது கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைதீவுகளிலும் காணி சுவீகரிக்கப்படும் இடங்களில் இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-05-25_at_11.36.38_AM

WhatsApp_Image_2025-05-25_at_11.36.36_AM

WhatsApp_Image_2025-05-25_at_11.36.39_AM

WhatsApp_Image_2025-05-25_at_11.36.40_AM

https://www.virakesari.lk/article/215695

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.