Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AA1yZ91O.png?resize=750%2C375&ssl=1

உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்.

உக்ரேன்  மீது  ரஷ்யப்  படையினர் நடத்திய வான்  தாக்குதல் உலகளவில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்  புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம்  தெரிவித்தனா்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா்.

இந்நிலையில் இது குறித்து ஊடகஙரம்ப்” புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும்,  புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” விமர்சித்துள்ளார்.

அத்துடன் புடின் தேவையில்லாமல்  பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும்  ட்ரம்ப்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம்”உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமிர் செலென்ஸ்கியையும்  ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப கருத்துத் தெரிவிக்கையில் ”செலென்ஸ்கியின் பேச்சு அவருடைய நாட்டுக்கு நன்மை செய்யவில்லை எனவும்,  அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது எனவும், இதனால் பல  சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1433169

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினுக்கு பைத்தியம்: டிரம்ப் காட்டம்

உக்ரேன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ரஷ்யாவின் புட்டின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரேன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இந்தப் போக்கு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வித்திடும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் சாடியுள்ளார். “அவரது வாய் பேச்சுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர் அமைதியாக இருப்பது நல்லது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரேன் முழுவதும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. 2022 தொடங்கிய உக்ரேன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாக இது அமைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரேன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ரஷ்யா - உக்ரேன் போர் நிறுத்தம் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். ‘யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்’ என்பது ட்ரம்ப் கருத்தாக உள்ளது. போர்நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய கடந்த வாரம் துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையே நடந்த நேரடி பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று நேரடி பேச்சுவார்த்தை ஏதும் இல்லை ரஷ்ய தரப்பு தெரிவித்தது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது. அதே நேரத்தில் ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடனகக-பததயம-டரமப-கடடம/50-358050

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

அதேசமயம்”உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமிர் செலென்ஸ்கியையும்  ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப கருத்துத் தெரிவிக்கையில் ”செலென்ஸ்கியின் பேச்சு அவருடைய நாட்டுக்கு நன்மை செய்யவில்லை எனவும்,  அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது எனவும், இதனால் பல  சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்....

எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்....

எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்

யாழ். கள உறுப்பினர்கள் சிலருக்கு தெரிந்தது...

இப்ப அமெரிக்க அதிபர் ரம்புக்கு தெரிந்திருக்கு.

ஆனால்... இழவு விழுந்த ஐரோப்பிய யூனியனுக்கு தெரியவில்லையே.

உக்ரேனிய மக்கள், ஒரு கோமாளியின் வாயால்... படுகிற பாடு எக்கச் சக்கம்.

உக்ரைன் மக்களை... கடவுள்தான் காப்பாற்ற வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்....

எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்

இவ‌ர்க‌ளும் அமெரிக்காவும் ஆர‌ம்ப‌த்தில் உத‌வாட்டி கோமாளி செலென்ஸ்கியின் க‌தையை புட்டின் எப்ப‌வோ முடித்து இருப்பார்

ட்ர‌ம் வெள்ளை மாளிகையில் கோமாளி செலென்ஸ்கிக்கு முன்னாள் சொன்ன‌து , நாங்க‌ள் உதவாட்டி உன்ர‌ க‌தை இர‌ண்டு கிழ‌மையில் ர‌ஸ்சியா முடித்து இருக்கும் , க‌டுப்பான‌ கோமாளி செலென்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு கில‌ம்பி நேராக‌ இங்லாந் வ‌ந்தார்.........................புட்டின் இதை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு தாக்குத‌ல‌ உக்ரேன் மேல் ந‌ட‌த்தி இருக்க‌னும் ஒரே நேர‌த்தின் வானால் த‌ரையால் ரோன்க‌ள் மூல‌ம்...........................................

6 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். கள உறுப்பினர்கள் சிலருக்கு தெரிந்தது...

இப்ப அமெரிக்க அதிபர் ரம்புக்கு தெரிந்திருக்கு.

ஆனால்... இழவு விழுந்த ஐரோப்பிய யூனியனுக்கு தெரியவில்லையே.

உக்ரேனிய மக்கள், ஒரு கோமாளியின் வாயால்... படுகிற பாடு எக்கச் சக்கம்.

உக்ரைன் மக்களை... கடவுள்தான் காப்பாற்ற வேணும்.

கோமாளியின் ஆட்சி கால‌ம் முடிந்து விட்ட‌து இன்னும் உக்கிரேனில் தேர்த‌ல் வைக்காம‌ உல‌க‌ நாடுக‌ள் போடும் விஸ்கேட்டை திண்டு கொழுத்துப் போய் இருக்கிறான்😡........................

ஊழ‌ல் மோச‌டி ம‌ன்ன‌ன் இவ‌ன் இந்த‌ போரை சாட்டி ப‌ல‌ பில்லிய‌ன் டொல‌ர‌ ஆட்டைய‌ போட்டு விட்டான்.....................அப்பாவி மக்க‌ள் க‌டும் குளிருக்கை வெக்கேக்க‌ நின்று வேலை செய்து வ‌ரி க‌ட்ட‌ அந்த‌ காசை டென்மார்க் போன்ர‌ நாடுக‌ள் இவ‌னுக்கு 2000மில்லிய‌ன் குரோன‌ அள்ளி கொடுத்த‌ வ‌ன்ன‌ம் இருக்கின‌ம்😡...............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்....

எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்

ஒட்டு மொத்த‌ ஜ‌ரோப்பிய‌ கோமாளிக‌ளும் சேர்ந்து இவ‌னுக்கு உத‌வினாலும் க‌ட‌சியில் தோல்வியில் தான் போய் முடியும் , மூன்று வ‌ருட‌த்துக்கு மேலாக‌ போர் செய்து இதுவ‌ரை இவ‌ர்க‌ள் இழ‌ந்த‌து தான் அதிக‌ம் ஒன்றையும் சாதிக்க‌ வில்லை

புட்டின் த‌ன‌து இட‌த்தை பிடிக்கும் ம‌ட்டும் போரை நிப்பாட்ட‌ மாடார்...............இப்ப‌வே பேசி தீர்ப்ப‌து உக்கிரேனின் எதிர் கால‌த்துக்கு ந‌ல்ல‌து.....................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.