Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா ஆணையாளரின் இலங்கை விஜயத்துக்கான காரணம் - அம்பலப்படுத்திய சாணக்கியன் எம்.பி

Vhg ஜூன் 26, 2025

1000534434.jpg

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (25-06-2025) இரவு யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு தொடர்பாக மேலும் குறிப்பிட்ட சாணக்கியன், “ ஈரான் - இஸ்ரேல், பாகிஸ்தான் - இந்தியா, ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் .

அரசியல் கைதிகளின் விடுதலை

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ”மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி

இந்த சந்திப்பு குறித்து சிறீதரன் தெரிவிக்கையில், ”செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினேன்.

இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம்” என தெரிவித்தார்.

https://www.battinatham.com/2025/06/blog-post_993.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அத்துடன், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார் என தெரிவித்தார்.

பாவம் இவர்கள்! ஜெனீவாவுக்கு போய் நீதிக்கான குரல் எழுப்பாமல் விட்டு, சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கி கொடுத்து கொண்டிருந்தார்கள். தாங்கள் போகா விட்டால், சொல்லாமல் விட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள். தமிழருக்கு என்ன நடந்தது சிங்களத்தால் என்பது இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் சொல்லப்போக அவர் தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்ல, சொன்னவர் எவ்வளவு மொக்கையீனப்பட்டிருப்பார்?

2 hours ago, கிருபன் said:

இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் .

ஹா..... ஹா..... என்ன பெரிய விளக்கம்! ஜெனிவாவில் தானே பேசப்போகிறார்கள். இங்கு நடந்தவற்றிற்கு சாணக்கியனிடம் இருந்து ஆதாரம் பெற்றுப்போக வந்திருப்பாரோ? அல்லது அனுராவிடம் தானே நேரடியாகசாட்சியம் அளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.