Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம்

10 AUG, 2025 | 11:38 AM

image

இராமேஸ்வரம் 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகினை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அந்த படகில் இருந்த டல்லஸ், பாஸ்கரன், ஆரோக்கிய சாண்ட்ரின், ஸ்லைடன் சேசுராஜா, அருள், ராபர்ட், லொய்லன் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள் தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீனவர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி மீனவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்காவிடில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

https://www.virakesari.lk/article/222217

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

10 AUG, 2025 | 04:36 PM

image

தமிழக அரசின் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் இந்தியா தமிழ்நாடு  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு  இலங்கை சிறையில் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மேலும் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதில் காலதாமதமாகும் பட்சத்தில்  வரும் 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம், 19ஆம் திகதி புகையிரத  மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் நேற்று வரை 61 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடியில் கைது  செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 61 இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், தொடர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள்  பிரச்சனை இன்றி கடலில் மீன் பிடிப்பதற்கு  இரு நாட்டு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.

மேலும் மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்வதில் கால தாமதம் செய்யும் பட்சத்தில் 13ஆம் திகதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம், 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனை தொடர்ந்து  வரும் 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன்  ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடந்த மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினசரி சுமார் ரூபாய் ஒரு கோடி வரை அந்நிய செலாவணி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222250

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.