Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச்செல்வன் படுகொலையை அடுத்து தமிழகத்தில் மீண்டும் ஈழ ஆதரவு எழுச்சி

Featured Replies

அமைதி முயற்சிகளில் ஈழத்தமிழர்களின் சமாதானக் குரலாய் ஒலித்த புலிகளின் அரசியல் துறை

பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசின் விமானப்படையின் குண்டு வீச்சில்

கொன்றொழிக்கப்பட்டமை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஈழ ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் தட்;டி எழுப்பி விட்டிருப்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

அதே சமயம் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கவிருக்கையில் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல் ஏதும் நடக்கலாம் என்ற பீதியும் பதற்றமும் தென்னிலங்கையில் தொற்றிக் கொண்டிருக்கின்றது.

அமைதி முயற்சியில் ஈடுபடும் சமாதானக் குரலாக ஒலித்தவர் அதுவும் யுத்தத்தில் காயமடைந்து, பாதிப்புற்று ஊன்று கோலுடன் நடமாடும் வலது குறைந்த ஓர் அரசியல் தலைவர் விமானக் குண்டுவீச்சு மூலம் இவ்வாறு அழிக்கப்பட்டமை தமிழகத்தில் பாமரமக்களின் உணர்வலைகளைத் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

இச்சாவு தமிழக மக்களின் உள்ளங்களைப் பாதித்து உணர்ச்சியைக் கிளப்பியிருப்பதை உணர்ந்து கொண்டமையால் தான் தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி உள்ளத்தைத் தொடும் இரங்கல் கவிதை ஒன்றை தமிழக முதல்வர் தமது அரசின் ஊடக பொதுசனத் தொடர்பு அமைச்சு ஊடாக உத்தியோக பூர்வமாக உடனடியாக வெளியிட்டார் என தமிழகச் செய்திகள் கூறுகின்றன.

தமிழச்செல்வன் கொல்லப்பட்டமைக்கு தமிழகத் தலைவர்கள் கண்டனமும், சீற்றமும் தெரிவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அவை பற்றிய செய்திகளுக்கும், தமிழச்செல்வனின் மறைவு, அவருக்குச் செலுத்தப்படும் அஞ்சலி போன்ற விபரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து ஊடகங்களுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றன.இதனால் தமிழக மக்களின் அன்றாட செயற்பாடுகளில் தமிழ்ச்செல்வனின் மறைவு பற்றிய தாக்கமும் ஒன்றிணைந்து அதுபற்றி அங்கு அதிகம் பேசப்படுகின்றது. கவலையும் உணர்வும்

மக்களிடையே பரஸ்பரம் பரிமாறப்படுகின்றன.

இலங்கையில் 1983 இல் இடம் பெற்ற இனக்கலவரம் தமிழகத்தில் ஏற்படுத்திய உணர்வுபூர்வத் தாக்கத்தைப் போன்று, தமிழ்ச்செல்வனைக் கொன்றொழித்த கொடூரமும் ஆழமான பாதிப்பைத் தமிழக மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்தி நிற்கின்றன என சென்னைச் செய்தியாளர் ஒருவர் சுடர் ஒளிக்கு நேற்று காலை தெரிவித்தார்.

தமிழகத்தில் பரவலலகப் பல இடங்களிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் ஆங்காங்கே தமிழ்ச்செலவனின் படங்கள் வீதியோரங்களில் வைக்கப்பட்டு அஞ்சலி வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

'அ.தி.மு.கவின் தலைவி ஜெயலலிதாவைத் தவிர ஏனைய அரசியல கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கு மக்களின் கவலை, விசனம், சீற்றம் ஆகியவற்றுடன் கூடிய கழிவிரக்கத்தைப்

புரிந்து கொண்டு, அதற்கேற்ப கருத்து வெளியிட்டுவருகின்றனர்". என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழ்ச்செல்வனின் இறுதி ஊர்வலம் இன்று வன்னியில் இடம் பெறுவதை ஒட்டி பாதுகாப்புப் பீதி தெற்கில் தொற்றிக் கொண்டிருக்கின்றது.

புலிகள் இச்சந்தர்ப்பத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடலாம் என்ற பதற்றம் தெற்கில் பரவியிருப்பதால் கொழும்பு மற்றும் தென்புறப் பிரதேசங்களில் பாதுகாப்பை இலங்கை அரசு தீவிரப்படுத்தியிருக்கின்றத

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

இனி றோ அமைப்பு எதாவது தில்லுமுல்லு வேலைகள் செய்து (தமிழக மீனவர்களை சிங்களப்படை கொன்று பழியை புலிகள் மீது போட்டதைப் போலச் செய்து விட்டு) பழியை புலிகள் மீது போடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.