Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 27, 2025 - 09:35 AM -

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. 

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 

20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. 

குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை 

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மெய்வல்லுநர் அணியினர் நாடு திரும்பினர்

Published By: Vishnu

28 Oct, 2025 | 07:24 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மெய்வல்லுநர் இன்று நாடு திரும்பினர்.

அவர்களை விமான நிலையத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட அமைச்சு அதிகாரிகள் வரவேற்றனர்.

1_rumesh_tharanga.jpg

2_fathima_shafiaya_yamick.jpg

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே அதிசிறந்த மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்தார்.

அத்துடன் பாத்திமா ஷபியா யாமிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் ஆகிய 3 போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

2a.jpg

3_vignarajah_vakshan.jpg

4_saseenthirakumar_mithunraj.jpg

5.jpg

6.jpg

https://www.virakesari.lk/article/228925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் ஜொலித்த இலங்கை இராணுவ வீர வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு

31 Oct, 2025 | 11:38 AM

image

இந்தியா ராஞ்சியில் ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் வியாழக்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர்.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர், அதில் 30 பேர் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.

அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 27 பதக்கங்களை இலங்கைக்கு வென்றுத்தந்துள்ளனர்.

இந்த சிறப்பான விளையாட்டு வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் இராணுவத் தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்காக ரூ. 6 மில்லியனுக்கு மேற்பட்ட சிறப்பு நிதியுதவியும் வழங்கினார்.

இதன்போது பதக்கம் வென்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு அவர்களின் அடுத்த நிலைக்கான நிலை உயர்வும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டது.

WhatsApp_Image_2025-10-31_at_07.31.16.jp

WhatsApp_Image_2025-10-31_at_07.31.17.jp

WhatsApp_Image_2025-10-31_at_07.31.17__1

WhatsApp_Image_2025-10-31_at_07.31.15__1

WhatsApp_Image_2025-10-31_at_07.31.15.jp

WhatsApp_Image_2025-10-31_at_07.31.14.jp

WhatsApp_Image_2025-10-31_at_07.31.14__1

WhatsApp_Image_2025-10-31_at_07.31.13.jp

WhatsApp_Image_2025-10-31_at_07.31.12.jp

https://www.virakesari.lk/article/229117

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.