Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை

31 Oct, 2025 | 11:01 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார்.

இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.

2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.

இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/229112#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு

02 Nov, 2025 | 09:11 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 1000 மெகாவாட் மின்சாரத்தை இருவழிப் பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்நிலையில், இரு நாட்டு அதிகாரிகள் குழு மெய்நிகர் மூலம் இந்த திட்டம் குறித்து கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு ஒன்றிய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும், இலங்கை குழுவுக்கு மின்வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் தலைமை தாங்கினர். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையின் எரிசக்தி பாதுகாப்புக்கு 1,000 மெகாவாட் மின் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது.

மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து உத்தேச இணைப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும். மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பிற்கான யோசனை 1970 களிலிருந்தே பேசப்பட்டிருந்தாலும், தீவிரமான நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 2010 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ஒரு விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தன.

இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர், தற்போது உத்தேச மின் இணைப்பு திட்டம் குறித்து ஒரு இலக்கை அடைய இருநாடுகளும் தீர்மானித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

https://www.virakesari.lk/article/229257

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.