Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sajith-Namal.jpg?resize=550%2C310&ssl=1

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன.

இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்  தீவை  ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி.

பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள்.

எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது  முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று  எழுதியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது.

திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.

நுகேகொட பேரணியில்  தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக்  கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது.

நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும்.

நுகேகொட   பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள்  எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.

ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப்  புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன்  கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை  ஆதரிக்கவில்லை.

நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது  “எக்ஸ்” பக்கத்தில்  அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது.

ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது.

அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா?

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து  தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார்.

நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்  கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது.

https://athavannews.com/2025/1453627

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சஜித்தும் நாமலும். அவர்கள் நினைத்திருப்பார்கள் அனுரா படையை அனுப்பி தங்கள் பேரணியை தடுக்கும் போராட்டம் வரும் அதனை தங்களுக்கு சாதகமாகலாமென நினைத்திருப்பார்கள் மாறாக அனுரா அவர்களது பேரணிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து தடங்கல் இல்லாமல் செல்ல வழி அமைத்துக்கொடுத்து போராட்டங்களால் தான் அடிபணியப்போவதில்லை அவர்கள் பாதையில் தான் செல்லப்போவதில்லை என்பதை நிரூபித்து அவர்களை வெட்கமடையச்செய்திருக்கிறார் ராஜபக்ச திருடர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பாதாள போதைக்கும்பல், ஊழல் பெருச்சாளிகள் கொலை கொள்ளைக்காரர் இவர்களை பணயம் வைத்து மக்களை திரட்டி தம்மை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஓடிகளைக்குமாடும் இவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும்.

மக்களைக்கூட்டுவதற்காக சஜித் தனது பச்சை இனத்துவேசத்தை வெளிக்காட்டி, தன்னை தமிழ் மக்களுக்கு இனங் காட்டியுள்ளாரே தவிர அவர் நினைத்தது நிறைவேறவில்லை, எதுவும் சாதிக்கவில்லை. உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன் என்கிற கதையாய் சஜித்தின் நிலைமை. தேர்தல் காலத்தில் இவர் எப்படி தமிழரிடம் வாக்குக்கேட்பார்? இவருக்கு தமிழ் மக்களின் வாக்கே அதிகமாக விழுவது, அதையும் இழந்து தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார்.

இவருக்கு வாக்குபோடும்படி கேட்ட சுமந்திரன், அரிய நேந்திரனை விலக்கி வைத்த சுமந்திரன் இதற்கு பொறுப்பேற்று, மக்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக தமிழரசுக்கட்சியிலிருந்து விலக வேண்டும். ஏனையோர் இவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

பாவம் சஜித்தும் நாமலும். அவர்கள் நினைத்திருப்பார்கள் அனுரா படையை அனுப்பி தங்கள் பேரணியை தடுக்கும் போராட்டம் வரும் அதனை தங்களுக்கு சாதகமாகலாமென நினைத்திருப்பார்கள் மாறாக அனுரா அவர்களது பேரணிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து தடங்கல் இல்லாமல் செல்ல வழி அமைத்துக்கொடுத்து போராட்டங்களால் தான் அடிபணியப்போவதில்லை அவர்கள் பாதையில் தான் செல்லப்போவதில்லை என்பதை நிரூபித்து அவர்களை வெட்கமடையச்செய்திருக்கிறார் ராஜபக்ச திருடர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பாதாள போதைக்கும்பல், ஊழல் பெருச்சாளிகள் கொலை கொள்ளைக்காரர் இவர்களை பணயம் வைத்து மக்களை திரட்டி தம்மை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஓடிகளைக்குமாடும் இவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும்.

மக்களைக்கூட்டுவதற்காக சஜித் தனது பச்சை இனத்துவேசத்தை வெளிக்காட்டி, தன்னை தமிழ் மக்களுக்கு இனங் காட்டியுள்ளாரே தவிர அவர் நினைத்தது நிறைவேறவில்லை, எதுவும் சாதிக்கவில்லை. உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன் என்கிற கதையாய் சஜித்தின் நிலைமை. தேர்தல் காலத்தில் இவர் எப்படி தமிழரிடம் வாக்குக்கேட்பார்? இவருக்கு தமிழ் மக்களின் வாக்கே அதிகமாக விழுவது, அதையும் இழந்து தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார்.

இவருக்கு வாக்குபோடும்படி கேட்ட சுமந்திரன், அரிய நேந்திரனை விலக்கி வைத்த சுமந்திரன் இதற்கு பொறுப்பேற்று, மக்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக தமிழரசுக்கட்சியிலிருந்து விலக வேண்டும். ஏனையோர் இவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்!

அநுரவுக்கு அலகு குத்தி நீங்கள் தூக்கிய காவடியை இறக்கி வைப்பதா அல்லது புத்தர் சிலை விவகாரம் ஆரம்பித்த பின்னர் வந்து கருத்துச் சொன்ன ஏனையோரைக் காட்டி அனுர அரசுக்கு முரட்டு முட்டுக் கொடுப்பதா என்ற தெரிவுகளில் இரண்டாவதைத் தேர்ந்திருக்கிறீர்கள்😂!

நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, முள்ளிவாய்க்காலுக்குக் காரணமான மகிந்தவை பதவியில் அமர்த்த உதவிய புலிகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன😎?

On 23/11/2025 at 05:38, தமிழ் சிறி said:

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து  தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?

https://athavannews.com/2025/1453627

இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைப் பத்தியாக மாற்ற நிலாந்தன் எந்த ஹோட்டலில் றூம் போட்டு யோசிக்கிறார் என்று அறிய வேண்டும்!

அநுர பதவியில் இருப்பதால் , எந்த தமிழ் கட்சியாக இருந்தாலும் அனுரவோடு தான் பேச வேண்டும். இதை விட்டு விட்டு "நாம் 14 மாதங்கள் முன்பு ஆதரித்த சஜித் பதவிக்கு வரும் வரை பேச்சு வார்த்தையில் இறங்கோம்!" என்று நிற்க தமிழர்கள் என்ன நிலமும், இராணுவமும் வைத்துக் கொண்டு காலங் கடத்தும் வகையில் வசதியாக இருக்கிறார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சஜித்தின் இனத்துவேஷத்தைப்பற்றி, இரட்டை வேடத்தைப்பற்றி இங்கு கதைக்கிறோம். கடந்துபோன பஸ்சுக்காக காத்திருக்கவில்லை. அனுராவை ஒரு இனவாதியாக காட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் இனவாதத்தை, மதவாதத்தை விட்டு வெளியேறினால், அதைவைத்து பிழைக்கும் கூட்டத்திற்கு வாழ வழியில்லை. அதனால் எப்படியாவது அதை வளர்த்து, ஊதிப்பெருப்பிக்க முயற்சிக்கிறார்கள். தேவையற்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களுக்கு சென்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அனுராவை ஒரு இனவாதியாக காட்ட முயற்சிக்கிறார்கள்.

🤣ஆம் உறவே! அநுர பால்குடி. "ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற" அதிபர் பதவியில் இருந்த படி, ஆனந்த சுதாகரனைக் கூட விடுவிக்காமல் இருக்கும் அநுர, நீங்கள் சொன்னது போல இனவாதியல்ல!

இது வெறும் அலகு குத்திய காவடியல்ல உறவே, அலகை "வேறெங்கோ" குத்திக் கொண்டு தூக்கும் அபூர்வ காவடி😎!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சுதாகரனை அனுரா கைது செய்யவில்லை. கைதிகள் விடுதலை என்று ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் ஓடித்திருக்கிறவர் அவரின் விடுதலைக்காக என்ன செய்தார்? சும்மா கோரிக்கை வைத்துகொண்டுபோய் கதிரை கண்டவுடன் அமரக்கூடாது, தனது சட்ட வல்லமையையும் காட்ட வேண்டும் அப்படி ஒரு திறமை அவரிடம் இருந்தால். ரணிலுக்காக வழக்காடுவார் கருத்து சொல்லுவார் ஆனால் தனது கதிரைக்கு மட்டும் இவற்றை தூக்கிக்கொண்டு போவார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2025 at 05:32, satan said:

ஆனந்த சுதாகரனை அனுரா கைது செய்யவில்லை. கைதிகள் விடுதலை என்று ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் ஓடித்திருக்கிறவர் அவரின் விடுதலைக்காக என்ன செய்தார்? சும்மா கோரிக்கை வைத்துகொண்டுபோய் கதிரை கண்டவுடன் அமரக்கூடாது, தனது சட்ட வல்லமையையும் காட்ட வேண்டும் அப்படி ஒரு திறமை அவரிடம் இருந்தால். ரணிலுக்காக வழக்காடுவார் கருத்து சொல்லுவார் ஆனால் தனது கதிரைக்கு மட்டும் இவற்றை தூக்கிக்கொண்டு போவார்.

உங்கள் சட்ட அறிவையும் பொது அறிவையும் காட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம், நன்றி😇!

உண்மையில், இன்று சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரை ரணில் மைத்திரி அரசின் நிர்வாகம் கைது செய்யவில்லை. உங்கள் "சட்ட வியாக்கியானத்தின்" படி அதனால் தான் ரணில் அரசு விடுதலை செய்யத் தடை இருந்திருக்கிறது போல!

நீங்களெல்லாம் இலங்கை சுப்றீம் கோர்ட்டில் இருக்காமல் ஏன் இங்க நிக்கிறீங்களோ தெரியவில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்களை நீங்கள் வாசிப்பதில்லை என்று பலமுறை இங்கு குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று எனது கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிற்க, கைது விசாரணை, மறியல், விடுதலை என்பது நீதிமன்றம் சார்ந்த விடையம். சில அரசியல் தெரியாத கோமாளிகள் நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதும், நீதிமன்ற உத்தரவுகளை கேலிக்கூத்தாக்குவதும், குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை அறிவித்தவர்களையும், விடுதலை செய்வதும், விசாரணையின்றி தடுத்துவைப்பதும், நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்புவதும், விசாரணைகளை குழப்புவதும், குறிப்புகளை அழிப்பதும் நடந்துள்ளது. அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுர, ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார், நீதிமன்ற விசாரணைகளில் தான் தலையிடப்போவதில்லை என. இதில் தலையிட்டு நீதிமன்றத்தை நாடி, அவர்களுக்காக வாதாடி, விடுதலை பெற்றுக்கொடுப்பது சட்டத்தரணிகளின் பணி. அனுராவிடம் போவதைவிட இவர் போயிருக்க வேண்டிய இடம் நீதிமன்றம். ரணிலுக்காக நீதிமன்றம் போக முடியுமென்றால் ஏன் தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை காணாமல் விட்டார்? ஏன் தேவையில்லாத இடத்தில் முறையிடுகிறார்? தனது அரசியல் பேரம் பேசலுக்காக பாக்கி வைக்கிறாரா?

நுகேகொடை பேரணியில் தொடங்கி, எங்கெங்கோ போய், அதனுடன் சம்பந்தப்படாத, தேவையற்ற பிரச்சனைகளை நுழைத்து என்னில் தவறு காண முயற்சிக்கிறீர்கள். இதில் எனது நேரத்தை செலவிட்டு வாசகர்களுக்கும் எரிச்சலை கிளப்ப நான் விரும்பவில்லை. உரையாடலுக்கு நன்றி!

ஒவ்வொரு அரசு மாறும்போதும் இந்த துருப்புச்சீட்டை தூக்கிக்கொண்டு ஓடுவதும் கோரிக்கை வைப்பதும் அழைப்பு கேட்ப்பதும் தனது கதிரைக்காகவே. நீதிமன்றம் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலகுவான வழி இருக்கு என்பது சில சட்ட மேதைகளுக்கு தெரிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.