Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில்,

இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே!

வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது.

‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன்.

அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது.

‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது.

தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன்.

‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது.

எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது.

கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா?

உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்.

இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர்.

எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார்.

https://akkinikkunchu.com/?p=350178

  • கருத்துக்கள உறவுகள்

1979 காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து பிரபாகரன், குமரப்பா , புலேந்திரன், சீலன் போன றவர்களுடன் ஒன்றாக தங்கியிருந்து தலைமைறைவு வாழ்க்கையை ஆரம்பித்தவர். தனது இளமைகாலம முழுவதையும் போராட்டத்திற்காக தியாகம் செய்தவர்

A/L இரண்டம் வருடம் sciences திறமையாக படித்துக்கொண்டிருந்த சிவசங்கரை (பொட்டமானை) இயக்கதில் சேர்ததவர். இன்று புலம் பெயர்ந்த போலித் தேசியம் பேசும் வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலை. 😢

Edited by island

4 hours ago, island said:

A/L இரண்டம் வருடம் sciences திறமையாக படித்துக்கொண்டிருந்த சிவசங்கரை (பொட்டமானை) படிப்பை குழப்பி இயக்கதில் சேர்ததவர். இன்று புலம் பெயர்ந்த போலித் தேசியம் பேசும் வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலை. 😢

அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

1979 காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து பிரபாகரன், குமரப்பா , புலேந்திரன், சீலன் போன றவர்களுடன் ஒன்றாக தங்கியிருந்து தலைமைறைவு வாழ்க்கையை ஆரம்பித்தவர். தனது இளமைகாலம முழுவதையும் போராட்டத்திற்காக தியாகம் செய்தவர்

A/L இரண்டம் வருடம் sciences திறமையாக படித்துக்கொண்டிருந்த சிவசங்கரை (பொட்டமானை) படிப்பை குழப்பி இயக்கதில் சேர்ததவர். இன்று புலம் பெயர்ந்த போலித் தேசியம் பேசும் வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலை. 😢

நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.

2 hours ago, Justin said:

நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!

அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

large.Screenshot2025-11-26144752.png

1) லெப். ஜோன்சன்

(ஜெயா ஜுனைதீன்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

22.08.1963 — 30.11.1985

படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து  தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 

2) வீரவேங்கை லத்தீப்

(முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்)

காத்தான்குடி, மட்டக்களப்பு.

16.11.1962 — 24.12.1986

மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.

3) வீரவேங்கை நசீர்

(முகமது நசீர்)

காங்கேயனோடை, மட்டக்களப்பு.

15.03.1963 — 30.12.1987

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

4) வீரவேங்கை சாபீர்

(சரிபுதீன் முகமது சாபீர்)

தியாவெட்டுவான், மட்டக்களப்பு.

13.05.1988

நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு.

5) வீரவேங்கை ஜெமில்

(ஜெயாத் முகமது உசைதீன்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

28.03.1968 — 05.08.1989

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு.

6) வீரவேங்கை ஆதம்

(எஸ்.எம். ஆதம்பாவா) 

சாய்ந்தமருது, அம்பாறை.

21.12.1967 — 03.01.1990

மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு.

7) வீரவேங்கை அலெக்ஸ்

(அகமது றியாஸ்)

மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.

23.01.1970 — 04.05.1990

அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

8 ) வீரவேங்கை கபூர்

(முகமது அலியார் முகமது சலீம்)

காங்கேயனோடை, மட்டக்களப்பு.

11.06.1990

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.


9) வீரவேங்கை தாகீர்

(முகைதீன்பாவா அன்சார்)

திருகோணமடு, பொலன்னறுவை.

29.04.1972 — 11.06.1990

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.


10) வீரவேங்கை அன்வர்

15.06.1990

அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

11) வீரவேங்கை தௌவீக்

(இஸ்மாயில்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

12.06.1990

திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

12. வீரவேங்கை ஜிவ்றி

(முகம்மது இலியாஸ்)

4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.

05.03.1974 — 13.06.1990

திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

13) வீரவேங்கை அர்ச்சுன்

(சொந்தப்பெயர் தெரியவில்லை)ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

14.06.1990

திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

14) வீரவேங்கை ஜலீம்

(முகமது இஸ்மாயில் மன்சூர்)

ஏறாவூர், மட்டக்களப்பு.

01.09.1990

முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு.

15) வீரவேங்கை மஜீத்

(முகமது இஸ்காக் கூப்சேக்அலி)

மீராவோடை, மட்டக்களப்பு.

18.06.1990

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

16) வீரவேங்கை ஜின்னா

(லெப்பைதம்பி செய்னூர்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

20.10.1970 — 19.06.1990

அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.


17) வீரவேங்கை தர்சன் 

(அப்துல்காதர் சம்சி)

ஊரின் பெயர் தெரியவில்லை,13.06.1990

18) வீரவேங்கை நகுலன்

(ஜுனைதீன்)

அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.

26.06.1988

அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

19) வீரவேங்கை அகஸ்ரின்

(சம்சுதீன் அபுல்கசன்)

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.08.1971 — 27.10.1988

அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுதகுழு மோதல் வீரச்சாவு.

20) வீரவேங்கை நசீர்

(சம்சுதீன் நசீர்)

ஒலுவில், அம்பாறை.

19.02.1960 — 17.02.1989

மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஆயுதகுழுவால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு.

21) வீரவேங்கை பாறூக்

(நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை)

அக்கரைப்பற்று, அம்பாறை.

08.01.1973 — 22.06.1989

அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

22) வீரவேங்கை அஸ்வர்

(ஜபார் ஜாபீர்)

அட்டாளைச்சேனை, அம்பாறை.

06.12.1989

பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதகுழு தாக்குதலின்போது வீரச்சாவு.

23) வீரவேங்கை சியாத்

(மீராசாகிபு காலிதீன்)

சாய்ந்தமருது, அம்பாறை.

18.08.1972 — 06.12.1989.

பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் அயுதகுழு பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.

24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர்

(அகமது லெப்பை செப்லாதீன்)

வேப்பானைச்சேனை, அம்பாறை.

25.02.1973 — 25.05.1990

அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

25) வீரவேங்கை ராவ்

(முகமது ரவீக்)

பொத்துவில், அம்பாறை.

15.06.1990

அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.


26) வீரவேங்கை இராமன்

(மாப்பிள்ளை லெப்பை அல்வின்)

இறக்காமம், அம்பாறை.

16.06.1990

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

27) வீரவேங்கை கனியா

(அபுசாலி புகாரி)

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.07.1990


28) வீரவேங்கை கமால்

மட்டக்களப்பு

07.06.1990

29) வீரவேங்கை கசன்

(ஆதம்பாவா கசன்)

மூதூர், திருகோணமலை.

05.11.1989

 முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு.


30) வீரவேங்கை சலீம்

03.07.1987

அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

31) வீரவேங்கை ஜெகன்

(ஆப்தீன் முகமது யூசுப்)

குச்சவெளி, திருகோணமலை.

08.04.1972 — 15.06.1990

திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

32) வீரவேங்கை நியாஸ்

மூதூர், திருகோணமலை.

17.06.1990

--> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு.

33) வீரவேங்கை கலையன்

(கச்சுமுகமது அபுல்கசன்)

முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை.

14.06.1990

 (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

34) வீரவேங்கை டானியல்

(கனீபா முகமது ராசீக்)

திருகோணமலை.

23.06.1970 — 22.06.1990

திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 35) வீரவேங்கை நிர்மல்

(அப்துல் நசார்)

புடவைக்கட்டு, திருகோணமலை.

19.01.1972 — 27.07.1990

திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு.

 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு

(அப்துல்காதர் சாதிக்)

யாழ்ப்பாணம்.

10.05.1966 — 25.08.1986

 யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு.

 37)வீரவேங்கை குபீர்

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.06.1990

அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

 38) வீரவேங்கை பர்ஸாத்

செட்டிக்குளம், வவுனியா

10.06.1990 (பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை)


39)வீரவேங்கை ரகுமான்

08.05.1986

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

 40) வீரவேங்கை ரகீம் 

08.05.1986  ( பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை)

 41) வீரவேங்கை வசந்தி

(அப்துல்கரீம் கற்பகரூபவதி)

முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

06.05.1978 - 26.06.1999

மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு.

 42) வீரவேங்கை பர்சாண்

(அப்துல்காதர் சம்சுதீன்)

காக்கையன்குளம், வவுனியா

04.05.1969 - 15.06.1990

வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 43) வீரவேங்கை நசீம் (கஜன்)

(அப்துல்மானாப் முகமது நசீம்)

மூதூர், திருகோணமலை

05.07.1964 - 25.07.1986

மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு.

 44) ஈரோஸ் மாவீரர் நியாஸ்

மன்னார்

11.07.1986

தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு

 45) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம்

(அப்துல் மானாஃப் முகம்மது நசீம்)

மூதூர், திருகோணமலை

05.07.1964 - 25.07.1986

மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு

 46) ஈரோஸ் மாவீரர் கசாலி

(சேகு முகமது சகாப்தீன்)

ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை

23.05.1989

மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு

 47) ஈரோஸ் மாவீரர் ரசிட்

இயற்பெயர் அறியில்லை

திருகோணமலை

26.08.1989

திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு

 48) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின்

இயற்பெயர் அறியில்லை

அக்கரைப்பற்று, அம்பாறை

09.11.1989

49) வீரவேங்கை அருள்

(மேலதிக விபரம் கிடைக்கப்பெறவில்லை)

மன்னார்
 

50) வீரவேங்கை மருதீன் எ முகமது

(சந்திரயோகு மருத்தீன்)

உயிர்த்தராசன்குளம், மன்னார்

25.10.1965 - 15.10.1987

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

51) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான்

(காலித்தம்பி காதம்பவா)

அக்கரைப்பற்று, அம்பாறை.

16.10.1963 - 07.06.1987

52) வீரவேங்கை கசாலி

(சேகு முகமது சகாப்தீன்)

ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை

23.05.1989

மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு.

 53) வீரவேங்கை குமார்

(சேதுதாவீது காசிம்)

இரத்தினபுரம், கிளிநொச்சி.

26.11.1988

யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு.

54) வீரவேங்கை கலீல்

(கலீல் ரகுமான்)

தோப்பூர், திருகோணமலை.

27.04.1988

யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.

55) வீரவேங்கை அசீம் அஷாத் ( திகதி. இடம் தெரியவில்லை)

56) 2ம் லெப். சாந்தன்

(நைனா முகைதீன் நியாஸ்)

நிலாவெளி, திருகோணமலை.

17.05.1972 — 06.02.1990

திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு.

57) லெப். ஜெமில்

(கரீம் முஸ்தபா)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

12.06.1990

திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

58) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம்

(காசிம் துலானி)

பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா

15.09.1990

வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு.

59) லெப் அருள்

(யூசப் ஜாசிர்)

உப்புக்குளம், வவுனியா

14.05.1975 - 05.11.1995

யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.

60) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் 

(காதர்முகைதீன் சருதீன்)

ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு

01.10.1978 - 07.04.1998

கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு

ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு.


61) கப்டன் பாறூக்

(அகமதுலெப்பை முகமது கனீபா)

அக்கரைப்பற்று, அம்பாறை.

12.06.1959 — 07.01.1987

யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.


62) கப்டன் குட்டி எ தினேஸ்

(முகமது அலிபா முகமது கசன்)

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

28.04.1987

திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.


63) கப்டன் நசீர்

சாளம்பைக்குளம், வவுனியா

00.11.1990

 64 வீரவேங்கை தமிழ்மாறன்

(அப்துல் ரகுமான் நிமால்)

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

01.01.1983 - 19.10.2000

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

65) வீரவேங்கை ரவீஸ்

ராமநாதபுரம், கிளிநொச்சி.

08.08.2006

66) வீரவேங்கை கணேசன்

(அப்துல்ஜபார் கணேசன்)

யாழ்ப்பாணம்

19.03.2007

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.

67) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்

(முகைதீன் ஜெரீனா-பெண்புலி)

50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

19.06.2007

யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.

68) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன்

(காதர்முகைதீன் நஜீம்கான்)

முல்லைத்தீவு

29.09.2008

அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு.

இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும்.

69) லெப். கேணல் அப்துல்லா

(முகைதீன்)

காத்தான்குடி, மட்டக்களப்பு

02.04.2009

ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. 

இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின்

 ( ஒரு முஷ்லிம் பெண் மாவீரர், 68, ஆண்மாவீரர்கள்  உட்பட 69 முஷ்லிம் மாவீரர்கள் வீரச்சாவை தழுவியதாக அறியமுடிகிறது)

-அரியம் -25/11/2025-

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

large.ldorkyp5.jpg

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில்,

இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே!

வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது.

‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன்.

அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது.

‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது.

தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன்.

‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது.

எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது.

கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா?

உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்.

இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர்.

எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார்.

https://akkinikkunchu.com/?p=350178

2008 ஆண்டு வரை தலைவர் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினங்களில் இவர்கள் நினைவுகூறப்படவில்லையா? இந்த புறக்கணிப்பு/தொய்வு நிலை பின்னர் ஏற்பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

பகிரியில் வந்த செய்தி. அதையே இணைத்துள்ளேன்.

தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தவர்களையும் நாம் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்துவந்து பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தி.

சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்பவர் கரும்புலியாக பலாலி இராணுதளத்தை தாக்கி 11.11.93 யன்று வீர மரணம் அடைந்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த மேலும் சில மாவீரர்கள் விபரம் வருமாறு,

பிரிவு: கரும்புலி

நிலை: லெப்டினன்ட்

இயக்கப் பெயர்:செங்கண்ணன்

இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்

ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)

வீரப்பிறப்பு: 25.01.1975

வீரச்சாவு: 11.11.1993

நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்

இயக்கப் பெயர்: உமா

இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி

ஊர்: தமிழகம்

வீரப்பிறப்பு: 27.05.1972

வீரச்சாவு: 11.12.1999

நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை

இயக்கப் பெயர்: மணியரசி

இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி

ஊர்: தமிழகம்.

வீரப்பிறப்பு: 02.02.1977

வீரச்சாவு: 19.04.1996

நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற

மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2

நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை

இயக்கப் பெயர்: பத்மநாபன்

இயற்பெயர்: பி.பத்மநாபன்

ஊர்: திருச்சி, தமிழகம்.

வீரப்பிறப்பு: 27.07.1963

வீரச்சாவு: 16.03.1988

நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை

இயக்கப் பெயர்: சுனில்

இயற்பெயர்: கதிரவன்

ஊர்: தமிழகம்.

வீரச்சாவு: 11.04.1988

நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்

இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்

இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)

இயற்பெயர்: முத்தையா இராமசாமி

ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.

வீரப்பிறப்பு: 23.07.1962

வீரச்சாவு: 11.12.1991

நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்

சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்

இயக்கப் பெயர்: உதயசந்திரன்

இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்

ராமமணி சேகரன்மகாதேவர்

ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

வீரப்பிறப்பு: 05.05.1969

வீரச்சாவு: 09.06.1992

நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி

நிலை: கப்டன்

இயக்கப் பெயர்: ஈழவேந்தன்

இயற்பெயர்: துரைராசன் குமரேசன்

ஊர்: தமிழ்நாடு.

வீரப்பிறப்பு: 25.05.1969

வீரச்சாவு: 20.11.1992

நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு

துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்

இயக்கப் பெயர்: சச்சு

இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்

ஊர்: பியர், இந்தியா.

வீரப்பிறப்பு: 04.09.1975

வீரச்சாவு: 20.12.1992

நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்

படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்

மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்

இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)

இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு

ஊர்: தமிழகம்

வீரப்பிறப்பு: 01.01.1966

வீரச்சாவு: 13.05.1996

நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த

காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்

இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)

இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்

ஊர்: தமிழகம்

வீரப்பிறப்பு: 31.05.1975

வீரச்சாவு: 19.05.1996

நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான

தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது

.நிலை: கப்டன்

இயக்கப் பெயர்: குற்றாளன்

இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்

ஊர்: தமிழகம்

வீரப்பிறப்பு: 08.08.1969

வீரச்சாவு: 16.07.1996

நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்

படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்

உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை

இயக்கப் பெயர்: சுதா

இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்

ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு

வீரப்பிறப்பு: 28.10.1980

வீரச்சாவு: 05.07.1999

நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்

சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்

வீரச்சாவு

துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்

இயக்கப் பெயர்: குருசங்கர்

இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்

ஊர்: தமிழகம்

வீரப்பிறப்பு: 18.04.1973

வீரச்சாவு: 25.07.1996

நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்

நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்

பெறும்போது வீரச்சாவு

துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..

எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள்? அதில் எத்தனை பேர் வீர மரணம் அடைந்தார்கள்? என்ற முழு விபரம் கிடைக்கவில்லை.

Edited by Sasi_varnam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.