Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


28 Nov, 2025 | 05:05 PM

image

( செ.சுபதர்ஷனி)

“தித்வா“  சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு,  நேற்று  கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக  இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன்,  தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.  

வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  நிலை சூறாவளியாக வலுபெற்று தற்போது நிலப்பகுதியை ஊடறுத்து  வடமேற்கு நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் பொழிந்த கன மழை மற்றும் கடுங்காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காற்றில் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததுடன், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என பலவற்றுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை (28) காலை கொழும்பில் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோடமால் தேங்கி வெள்ளம் ஏற்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.   காற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட தகரங்கள், வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள், பதாதைகள் என பல பொருட்கள் வீதிகளில் காணக்கிடைத்தன. 

போக்குவரத்துக்கு தடையாக இருந்த பொருட்களை பொலிஸார், இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு  அப்புறப்படுத்தியிருந்தனர்.  அதிகமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால்  கடவத்தை முதல் கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் வாயில் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.  அத்தோடு தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க நுழைவாயில் வீதி, எல்விட்டிகள மாவத்த  வீதி, ரெஜின வீதி சந்தி,  கொட்டாஞ்சேனை மற்றும் பிரேமசிரி கோமதாச மாவத்தை  ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைபட்டது. வீதிகளில் முறிந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் விழுந்துக் கிடந்த மரங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் மற்றும் இடர் முகாமைத்துவ பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

களனி கங்கையின் நீர்மட்டம்  உயர்வடைந்த  நிலையில் களணி கங்கையை அன்டிய தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. வத்தளை, களணி, வெல்லம்பிட்டி,  கொலன்னாவ , சேதுவத்தை, தெமட்டகொடை, நவகம்புர மற்றும்  அவிசாவல்லை ஆகிய பகுதிகள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அவிசாவளையில் உள்ள நீர் மானிப்படி 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன்,  தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.  

அதனையடுத்து களணி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும்  மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன்,  நேற்றைய தினம் களணி கங்கையை அன்மித்த அவதானமிக்க பகுதியிலிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீரற்ற வானிலையால் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம்.

28 Nov, 2025 | 03:29 PM

image

கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் நாளை சனிக்கிழமை (29) இரவு வேளையில் கொழும்பில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உடைமைகளை ஆயத்தம் செய்து பாதுகாப்பாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.