Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக சமூகத்திற்கான புரிதல்களை ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும்: "உதயன்" வித்தியாதரன்

Featured Replies

போர்க்களத்தில் காயம்பட்டு வலுகுறைந்து- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழர் தலைமையுடன் கடந்த காலங்களில் எல்லாச் சமர்களிலும் யுத்தங்களிலும் சமாந்திரமாக தனது ஊடக துறையினூடாக பெரும் பங்காற்றிய இன்றும் பங்காற்றி வரும் மூத்த பத்திரிக்கையாளர் வித்தியாதரன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு வழங்கிய நேர்காணல் எமக்கு சில புதிய வெளிச்சங்களை கொண்டுவந்து தந்துள்ளது.

//பொறுப்புணர்வோடு போர்த் தந்திரங்கள் வகுக்கப்படுகிற பதுங்கும் நேரத்தில் பதுங்கியும் பாயும் நேரத்தில் பாய்ந்தும் செல்கிற ஒரு போர்க்களம் இது.

ஒவ்வொரு பந்தையும் சிக்சராகவும்

எந்த நேரமும் பாய்ந்து கொண்டிருப்பதானதுமான ஒரு விளையாட்டு அல்ல.

சில இடங்களிலே எதிரியை உள்ளே வரவழைத்து வலையில் வீழ்த்த வேண்டியதிருக்கும். அதனையெல்லாம் விசனத்தோடு நோக்கக் கூடாது.//

வித்தியாதரனின் உபயோகித்துள்ள ஒவ்வொருவர்த்தைக்குள் மிக ஆழமான அர்த்தங்கள் இருக்கிறன. ''ஆடுற மாட்டை ஆடியும் பாடுற மாட்டை பாடியும் கறக்க வேண்டும்'' என்பார் முதியோர்கள்.

சிங்கள பேரினவாத அரசை விட சிறப்பாக தமிழர் தலைமையினாலும் அதற்கு பக்கபலமாக நிற்கும் ஒரு மில்லியன் புலம் பெயர்ந்த தமிழர்களால் நவீன உலக அசைவியக்கம் கையாளமுடியும். அதற்குரிய logistic சிங்கள அரசைவிட Tamil diaspora அதீதமாக வைத்திருக்கிறது. அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் போக்குடன் முரண்படாத வகையில் புதிய வழிமுறைகளை தமிழர் தலைமை முன்மொழிய வேண்டும்

கருத்துக்கள் பொருத்தமானவைதான். இப்பகுதியில் குறைகூறுவதாக எவரும் எண்ண வேண்டாம். சர்வதேசம் தூங்கவில்லை, தூங்குவது போன்று பாசாங்கு பண்ணுகின்றது. தமிழர்தரப்பின் கோரிக்கைகள் நியாயத் தன்மைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் சிங்கள அரசு சார்ந்த சார்புநிலையே அவர்களிடமுண்டு. அதில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தினால் தமிழர் தரப்பிற்கு சாதகமான நிலையெடுப்பார்கள், என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல் தலைவர்களைச் சந்தித்தல், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அரசியல் தலைவர்களை அழைத்தல் போன்ற விடயங்கள் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளன. அதைத் தவிர போராட்டத்திற்கான பங்களிப்பினைத் தமிழர் செய்து கொண்டிருப்பதாகத்தான் நான் உணர்கின்றேன்.

அரசதரப்ப நெருக்கடிக்குள்ளாகும் போது ஓடிவரும் சர்வதேசம் தமிழர்கள் அடைந்த கணக்கற்ற அவலங்களுக்கு என்ன செய்தது. இன்று கூட சர்வதேசம் இலங்கைக்கு உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கிறது. இவைகளெல்லாம் உலகம் அறிந்தவிடயம். எனக்குத் தென்படும் விடயம் ஒன்றுதான். விடுதலைப்புலிகளிடம் சர்வதேசத்தின் தேவை என்னவாக இருக்கின்றது??????

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு கால கட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர் பெரிய அளவில் lobby செய்யாமல் மேற்குலகின் ஆதரவை தமிழர் தலைமையின் அரசியல் முடிவுகள் பெற்று தந்தன. அவ்வாறான ஒரு அரசியல் முன்னகர்வு சிங்கள அரசின் பொருண்மிய அபிவிருத்துயுடன் யுத்தத்தை முன்னெடுக்கலாம் என்ற மகிந்த சிந்தனையின் அத்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும்.

அதிதீவிர யுத்த முனைப்புடன் நிற்கும் சிங்கள அரசுக்கு அரசியல் பதிலடி சமாதானம் என்பதேயாகும். இது கடந்த ஒரு வருடத்தில் தமிழர் தலைமை இழந்த மேற்குலக ஆதரவை மீளப்பெற புதிய வழிகளைத் திறந்து விடும். தமிழர் தலைமைக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்டால் ஐரோப்பாவில் தமிழ்தேசிய ஆதரவாளர்கள் அளப்பரிய உற்சாகம் பெறுவார்கள். அல்லாது போனால் பிரான்ஸ் நிலை மற்றைய நாடுகளுக்கும் தொற்றலாம்.

சமாதான பேச்சுகளுக்கு நாம் தயாராக இருப்பதாக ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்ததை அறிவித்து சிங்கள அரசை மேற்குலகத்திற்கு எதிராக திசை திருப்பி விடவேண்டும். அவ்வாறான ஒரு முரண்பாடு எமக்கெதிரான இருக்கும் இன்றைய பாரிய அழுத்ததை மென்மையாக்க உதவும். அவ்வாறான காலஇடைவெளி எம்மை நாம் மீள்கட்டமைக்க உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.