Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் லண்டனில் சிறையில் இருக்கும் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்

Featured Replies

இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் லண்டனில் சிறையில் இருக்கும் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் - நிதர்சனம் செய்தியை உறுதிப்படுத்தினார் மக்ஸ்வல் கீகல் ஆனால் மறுத்தார் தூதுவர்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ

நிதாசனம் கருணா பிரித்தானிய உளவுத்துறையின் விசாரனையில் இருப்பதையும் குறித்த விசாரனை நடைபெற்ற இடத்தில் உள்ள வாசலில் இலங்கை தூதுவராலயத்தின் வாகனம் நிண்டதையும் நிதர்சனம் 03ம் திகதி செய்தியில் பகிரங்கபடுத்தியது. ஆனாலும் அதற்கு பதில் தரும் விதத்தில் இலங்கைக்கான தூதுவர் அந்த செய்தியினை ஆசியன்ரிபியுன் இணையம் ஊடாக 08 திகதி மறுத்து எமது செய்தி பொய் எண்று அறிவித்தார். ஆனால் பிரித்தானிய தூதுவரகம் கருணாவை தடுப்பு முகாமில் தொடர்புகொண்டதை இண்று 09 ம் தகதி தனது பேட்டியில் லண்டன் பத்திரிகையாளருக்கு உறுதிபடுத்தினார்.

1983ல் மட்டக்களப்பில் ஆரம்பமாகிய கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் (40) இன், அரசியல் வாழ்வு 2007, நவம்பர் 2ல் பிரித்தானிய குடிவரவு தடுப்புமுகாம் ஒன்றில் பெரும்பாலும் அஸ்தமனத்துக்கு வந்துள்ளது. நவம்பர் 2, காலை 7 மணியளவில் உலகத் தலைநகரங்களில் ஒன்றான லண்டனின் இதயப் பகுதியில் வைத்து கருணா கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் தெரிவித்தார். தான் அறிந்தவரை கைது செய்யப்படும் போது கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகளும் உடனிருந்ததாகவும், கருணா மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைத் தூதரகத்தில் நவம்பர் 7 ல் இடம்பெற்ற நிதர்சனம் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மக்ஸ்வெல் கீகல் மேற்கண்ட விபரங்களைத் தெரிவித்தார். நவம்பர் 2ல் கைது செய்யப்பட்ட கருணா தற்போது அரசியல் தஞ்சம் கோரி உள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளது என்று கூறிய மக்ஸ்வெல் கீகல் கருணா தனது சொந்த விருப்பிலேயே இம்முடிவுக்கு வந்ததாக தாம் அறிவதாகவும் தெரிவித்தார். கருணாவுக்கான சட்டத்தரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தான் நம்புவதாகவும் அதற்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மக்ஸ்வல் கீகல் தெரிவித்தார்.

கருணா தடுப்பு முகாமில் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புப் பற்றி திருப்தி அடைந்து உள்ளதாகவும் கருணாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாவுக்கு பிரித்தானியாவை விட வேறொரு ஐரோப்பிய நாடு (சுவிஸ்) அவரின் சொந்தப் பெயரிலேயே அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்திருந்தது. ஆனால் மனைவி, பிள்ளைகள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோரி@ அவர்களுக்கு டநயஎந வழ சநஅயin வழங்கப்பட்டதால் கருணாவும் பிரித்தானியாவுக்கே வந்ததாக கருணாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா கைது செய்யப்படுவதற்கு முன்னரேயே பிரித்தானியாவில் நிரந்தரமாகத் தங்க முடிவு செய்திருந்ததாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்தன.

கருணா லண்டனில் உள்ளதாக செய்திகள் வெளியாகியதும் பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திடம் அது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட மக்ஸ்வெல் கீகல் அப்போது இலங்கைத் தூதரகம் அது பற்றி அறிந்திருக்கவில்லை எனத் பொய் தெரிவித்தார்.

பின்னர் கருணா கைது செய்யப்பட்டதும் பிரித்தானிய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக இலங்கைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து குடிவரவுத் தடுப்பு முகாமில் வைத்து கருணாவுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் மக்ஸ்வெல் கீகல் தெரிவித்தார்.

எல்லா இலங்கைப் பிரஜைகளைப் போலவே தாம் கருணாவையும் கருதுவதாகவும் இலங்கைப் பிரஜை என்ற வகையில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கைத் தூதரகத்தின் கடமை என்றும் மக்ஸ்வெல் கீகல் தெரிவித்தார்.

கருணாவுடைய பாதுகாப்புக் கருதியே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம் மற்றும் விபரங்கள் இரகசியமாக இலங்கை தூதுவராலயத்தால் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மக்ஸ்வெல் கீகல் கூறினார்.

கருணா இலங்கைப் பிரஜை என்ற வகையில் இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் அதன் எல்லைகளுக்குள் உதவ முடியும் என்று கருணாவுடன் தொடர்பில் இரக்கும் மக்ஸ்வெல் கீகல் புளுடா விடுகிறார்.

மனித உரிமைமீறல்கள், ஆட்கடத்தல், கொலை என பல குற்றங்கள் கருணா மீது சுமத்தப்பட்டு உள்ள போது அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்படுவது சாத்தியமா எனக் கேட்டதற்கு கருணா கைது செய்யப்பட்டது குடிவரவுக் குற்றத்திற்கே அல்லாமல் வேறு எந்தக் குற்றங்களுக்கும் அல்ல என்று குறிப்பிட்ட மக்ஸ்வெல் கீகல் அவரது அரசியல் தஞ்ச விண்ணப்பம் எப்படி பரிசீலிக்கப்படும் என்பது பிரித்தானிய நீதித்துறையுடைய விடயம் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் கருணாவுடைய அரசியல் தஞ்சம் பரிசீலிக்கபடும் அதே சமயம் கருணாவின் மனித உரிமைமீறல்கள், ஆட்கடத்தல், கொலைக் குற்றங்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்ய மனித உரிமை அமைப்புகளும் தனிநபர்களும் முயல்கின்றனரே எனக் கேட்ட போது தான் அறிந்த வரை கருணா மீது இலங்கையில் எந்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கருணா என்ற தனிமனிதருக்கு எதிராகக் குற்றம்சாட்ட ஆதாரங்கள் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும் மக்ஸ்வெல் கீகல் தெரிவித்தார்.

கருணாவின் அரசியல் தஞ்சம் விசாரணைக்கு வரும் போது, தன்மீது சுமத்தப்படும் மனித உரிமைமீறல்கள், ஆட்கடத்தல், கொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை உளவுப் பிரிவினரையும் கருணா குற்றம்சாட்டுவதற்காக வாய்ப்புகளே உள்ளதென சுட்டிக்காட்டிய போது அதற்கு கருத்துச் சொல்வது ஏற்புடையதல்ல என மக்ஸ்வெல் கீகல் மறுத்தவிட்டார்.

கருணா யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவதற்கான வாய்ப்புப் பற்றிக் கேட்டதற்கு இலங்கை சர்வதேச நீதிமன்ற உடன்பாட்டில் கையெழுத்திடவில்லையெனக் கூறிய மக்ஸ்வெல் கீகல் கருணா ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தங்கள் பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை வைத்தள்ளனர் என்றும் மக்ஸ்வெல் கீகல் கூறினார்.

இலங்கை அரசு கருணா - பிள்ளையானுக்கு இடையே பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தி அவர்களை மோதவிட்டுள்ளது எனக் கேட்டதற்கு அது முற்றிலும் உள்வீட்டுச் சண்டையே என்று மக்ஸ்வெல் கீகல் தெரிவித்தார்.

எல்லா நாட்டு உளவு நிறுவனங்களையும் போல் இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவும் புலனாய்வுத் தகவல்களுக்கு கருணாவைப் பயன்படுத்தி இருக்கலாம் அது கிழக்கு மாகாணத்தை விடுவிக்க உதவி இருக்கலாம் என மக்ஸ்வெல் கீகல் கூறினார்.

மற்றும்படி கருணா குழு இலங்கை இராணுவத்தடன் இணைந்து தாக்குதல்களை நடத்தவில்லையென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருணா அரசியல் தஞ்சம் கோரியதுடன் அதன் எதிர்காலமும் கருணாவின் அரசியல் எதிர்காலமும் பெரும்பாலும் ஒரு மரணப் புள்ளிக்கு வந்துள்ளதாக மக்ஸ்வெல் கீகல் தெரிவித்தார்.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் சகஜ வாழ்வை நிலைகுலைய வைத்து, பல நூற்றுக் கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமான கருணாவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாவதில் யாருக்கும் மனவருத்தம் இருக்க முடியாது.

ஆனால் எந்த ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் கருணா தனது மக்களுக்கு மறுத்தாரோ அதே ஜனநாயகத்தினதும் மனித உரிமையினதும் பெயரில் அடைக்கலம் கோரிஉள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்து விட்டு இன்னமும் தாயகத்தில் உள்ள அந்த மக்களுக்கு யார் ? என்ன சொல்வது

நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தூதுவர்கள் கருணாவை தற்கொலைக்குத் தூண்டவோ தற்கொலைக்கு தேவையானவற்றைக் கொடுக்கவோ வாய்ப்புள்ளது. இதுபற்றி யாராவது அவசரமாக பிரித்தானிய பொலிசாரை எச்சரிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போய்ச்சேரட்டும்!

இப்ப அனுபவிப்பான் மனிதனாக இருந்திருந்தால் தலையில கையை வச்சு அழுதேருப்பான் எப்படி இருந்தனான் இப்படி ஆகீட்டேனே என தலைவருடன் இருக்கும் போது மரியாதையாக ராஜதந்திரி அந்தஸ்துடன் வெளிநாட்டு பயணங்கள் ஆனால் துரோகத்தின் பின் இன்று ஒரு நாட்டின் விசா களவு கைதி இதுதான் காலம் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கைவிட்டு விட்டார்கள்

இயக்கம் நடத்துவது ஒன்றும் இலகு அல்ல அதற்கு ஆழுமையும் நிர்வாக திறமையும் வேன்டும் அந்த ஆழுமையும் நிர்வாகத்திறனும் சரிவர அளவுக்கு அதிகமாக இருப்பது மேதகு தேசியத்தலைவரிடம் மட்டுமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.