Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன்.

என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார்.

1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.

காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார்.

அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம்.

அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள்.

அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர்.

சிறிது நேரத்தில் ராஜீவ் என்னை அழைத்து நடந்ததைப் பகிர்ந்தார்.

நான் திரும்ப அழைத்தபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 14, 2008 — எதிர்பாராத ஒரு அழைப்பு

ராஜீவ் எங்களை மீண்டும் தொடர்பு கொண்டார்.

சம்பத் முனசிங்க என்ற கடற்படை வீரர் தம்மை பிடித்து ஹெட்டியாராச்சி என்பவரிடம் ஒப்படைத்ததாகச் சொன்னார்.

அவர்கள் முதலில் வெலிசராவில் வைத்திருந்து பின்னர்

திருகோணமலையின் Gunsite கடற்படை வதை முகாமுக்கு மாற்றப்பட்டதாக கூறினார்.

2009 மே 21 — என் மகனின் கடைசி குரல்

அன்று ராஜீவ் என்னை இறுதி தடவையாக அழைத்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மனம் நெகிழ்ந்த நபரிடமிருந்து தொலைபேசியை வாங்கி பேசினார்.

அவரது குரல் நடுங்கியது…

அங்கு நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை பற்றி கூறினார்.

“அம்மா… 18–20 வயதுடைய இளைஞர்களை இங்கு கொண்டு வந்து சு*ட்*டு*க் கொ*லை செய்கிறார்கள்…”

கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரத்தக்கறைகள் மற்றும் பெருமளவு இரத்தத்தை கண்டதாகச் சொன்னார்.

தனக்கும் அந்த விதி ஏற்படும் என அச்சத்தில் இருந்தார்.

நான் அவனை உற்சாகப்படுத்தி:

“ஜயப்பனை வணங்கு… கடவுள் உன்னை காப்பாற்றுவார்,”

எனச் சொன்னேன்.

அப்போதே, அவன் சாப்பாடு வந்து முடிச்சிருந்த பேப்பரில் ஐயப்பனின் படம் இருந்ததாகவும், அதை தன்னிடம் வைத்திருப்பதாகவும் சொன்னான்.

அதன் பின்… 16 ஆண்டுகள் கழிந்தும் ஒன்னு கூட தகவல் இல்லை.

இன்று வரை, ராஜீவ் 2009 மே 21க்குப் பிறகு கொ*லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.facebook.com/namathuyalpanam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.