Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர்.

அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பக அறையின் தரையில் உள்ள கோப்புகள் சிதறிக் கிடப்பதோடு, அந்த அறையில் இருந்த பெட்டிகளும் உடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை.

இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்னால் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

மறு அறிவித்தல் வரை, வங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படாது என அறிவிப்புகள் பலகையில் போடப்பட்டிருக்கின்றது. புது வருடம் வரும் நேரத்தில் இது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றில்லை, சிலருக்கு சோகத்தையும்  ஏற்படுத்தும்

blue News
No image preview

Germany: Hole in vault triggers rush of bank customers

Unknown persons have broken into a bank building in the German city of Gelsenkirchen and ransacked several safe deposit boxes. According to police, the perpetrators used a large drill to get into the

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kavi arunasalam said:

பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை.

நமதாக்கள் பணம் இதற்குள் தான் சேமிப்பு.

200 பேரில் எங்கட ஆட்கள் யாராவது நின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kavi arunasalam said:

பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை,

இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்னால் கூடியுள்ளனர்.

இவர்கள் வங்கி காப்பக பெட்டிக்கு பதிலாக இந்த பணத்தை தமிழ் ஆட்களிடம் கொடுத்து வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்து தேவைபடுகின்ற நேரத்தில் இவர்களிடம் பவுத்திரமாக திருப்பி ஒப்படைத்திருப்பார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.